29வது சூம் மூலம் கவிதை வாசிப்பு கூட்டம்


அழகியசிங்கர்


வெள்ளிக்கிழமை (11.12.2020) பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு பாரதியின் கவிதைகளை மட்டும் வாசித்தோம். நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதுமை செய்ய வேண்டுமென்று நினைப்பேன். இக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அதைப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


இந்த முறை பாரதியார் கவிதைகளை அவருடைய பாடல்களை வாசிப்பதும் இசைப்பதுமாய் கூட்டம் நடத்தி முடித்தேன். எல்லோரும் இதில் கலந்து கொண்டு பாரதியார் பாடல்களை/கவிதைகளை பாடினார்கள். ஏற்கனவே கவிதைகளை வாசித்தவர்களின்/பாடியவர்களின் ஒளிப்பதிவுகளை சூமில் பதிய வைத்தோம். சிறப்பாக வந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன