22வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம்

 

அழகியசிங்கர்

வணக்கம்.


இந்த முறை கவிதை வாசிக்கிறவர்கள் ஒரு கவிதையை வாசிக்க 2 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சற்று வித்தியாசமாகக் கவிதை வாசிக்க முயற்சி செய்வோம்.  நம்மிடையே பழங்கால கவிஞர்கள் அவ்வையார், காளமேகப் புலவர், இரட்டைப் புலவர்கள் எல்லாம் உண்டு.  அவர்கள் சிலேடையாகவும், அங்கத உணர்வுடன் கூடிய கவிதைகள் எழுதி உள்ளார்கள்.


நவீன கவிஞர்களும் பலர் எழுதியிருக்கிறார்கள்.   கவிதை வாசிப்பவர்கள் அதுமாதிரியான உணர்வுடைய கவிதைகளை வாசிக்கவும்.


இந்த முறை யாருடைய கவிதை வேண்டுமானாலும் நீங்கள் வாசிக்கலாம்.  மொழிபெயர்ப்புக கவிதை வாசிக்கலாம்.  நேரிடையாகப் பெயர் கொடுத்துக் கலந்து கொள்ளுங்கள்.
வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள்.
வெள்ளிக்கிழமை (23.10.2020) அன்று மாலை 6.30க்கு கவிதை வாசிப்புக் கூட்டம்


முனைவர் கல்யாணராமன் ஆத்மாநாம் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துகிறார்.  சிறப்பான உரையாக இது இருக்கும் தவற விடாதீர்கள்.

Topic:  விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் 

Time: Oct 23, 2020 06:30 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81421763609?pwd=QmFobFJqOFZQUnYyZnY3WXVsM0hWQT09
Meeting ID: 814 2176 3609Passcode: 647559


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன