மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 134

அறிவேனா

சி.சு.செல்லப்பா

கனவுக்குள் கனவு; 

பிளந்து 

இமை திருகி- எழ 

விழித்ததுண்டு 

நினைவுக்குள் நினைவு; 

மூழ்கி 

சொரணை தப்பி – விழ 

உறங்கிய துண்டு

வாழ்வுக்குள் வாழ்வு; 

தெளிந்து 

நேர் ரோட்டில் 

நடந்தேனா 

சாவுக்குள் சாவு; 

வற்றி 

ஓயும் பொழுதை 

அறிவேனா

நன்றி : மாற்று இதயம் – சி.சு.செல்லப்பா – எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு – மே, 1974 – பக்கங்கள் : 104 – க்ரவுன் அளவு – விலை : ரூ. 4,00

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன