அழகியசிங்கர்
தெருவில்
நடந்து செல்ல வீட்டுக் கேட்டைத்
திறந்து
தெருவில் இறங்கினான்
சுற்றிலும் கொரோனா கொரோனா என்ற ஓலம்
காதில் விழ
யாரும் கண்ணில் படவில்லை தெருவில்
நடந்தவன்
திரும்பவும் வீட்டிற்குள் சென்று
கட்டிலின் அடியில் போய்
பதுங்கிக்கொண்டான்
