மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 125

அழகியசிங்கர்  

 இரு குருவிகள்

குலசேகரன்

வழி தவறிப் புகுந்த 

ஒரு குருவி நீண்ட நேரமாக 

சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது 

நான் மையத்திலிருந்து 

பறப்பதைக் காண்கிறேன் 

அது இறகுகள் தொய்ந்து 

எதிரில் நின்றுள்ள 

கண்ணாடியின் மீது அமர்கிறது 

அருகிலிருக்கும் உருவத்தை இனம் கண்டு 

குனிந்து அலகால் கொத்துகிறது 

குருவியின் பிம்பமும் தொடுகிறது 

ஒரே புள்ளியில் 

இரு அலகுகளும் 

தொடர்ந்து சப்தித்துக் கொண்டிருக்கின்றன 

உயிரின் சலனங்கள் உண்டாகாத பீதியில் 

இடத்தை விட்டெழுந்து 

அம்பாக வானில் குருவி மறைகிறது 

நான் தேடிப் பார்க்கிறேன் 

உள்ளே சிறகுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன

நன்றி : ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி – குலசேகரன் – உயிர்மை பதிப்பகம் 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 – முதல் பதிப்பு :டிசம்பர் 2008 பக்கம் : 80 – விலை : 50.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன