செப்டம்பர் மூன்றாம் தேதி

38 ஆண்டுகளுக்கு முன்னால்
நடந்த நிகழ்ச்சியை
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
இன்னும் ஒருவரை ஒருவர்
புரிந்துகொண்டோமா என்றெல்லாம்
தெரியவில்லை

காலையில்
ஹனுமார் கோயிலுக்குச் சென்றோம்

இன்று கடைக்குச் சென்று
எனக்கு வேண்டிய துணிமணிகளை
வாங்கிக்கொண்டேன்
அவளும் கூடவே வந்தாள்

புத்தகக் கடையில் புத்தகங்களை
வாங்கி வெறுமனே சேர்ப்பதை அவள் விரும்பவில்லை
ஆனால் தடுப்பதில்லை
அவள் விருப்பம் என்னவென்று தெரிவதில்லை

இன்று செப்டம்பர் மூன்றாம் தேதி

(Photo taken by Srinivasan Natarajan)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன