என் நண்பர் மாதவ பூவராக மூர்த்தியின் கட்டுரைத் தொகுப்புதான் üஇடம் பொருள் மனிதர்கள்.ý இன்றைய சூழ்நிலையில் எழுத்தில் ஹாஸ்ய உணர்வு என்பது மருத்துக்குக் கூட கிடைப்பதில்லை. அதைப் போக்கும் விதமாகத்தான் மாதவ பூவராக மூர்த்தியின் இந்தப் புத்தகம் தெரிகிறது. அவர் ஒரு நடிகர், நாடக இயக்குநர், நாடகம் எழுதுபவர். சிறுகதை எழுதுபவர். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்பு இவருடையது வந்துள்ளன. இதெல்லாம் மீறி நல்ல மனம் கொண்ட மனிதர். இந்தப் புத்தகத்தைக் கொண்டு வர எனக்கு ரொம்ப நாட்கள் ஆயிற்று. அவருடைய ஒவ்வொரு கட்டுரையும் ரசித்துப் படிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவும் செய்யலாம்.
இன்று காலையில்தான் மூர்த்தி தன்னுடைய புத்தகப் பிரதியை அவருடைய நண்பர் ஆர் கேயிடமும், அவர் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
156 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.130 தான்.
