நான் யார்?…நான் யார்?…

 

 

மிகக் குறைவான இடத்தில் புத்தகம் எழுதியவரின் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதே என் நோக்கம்.  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  பொதுவாக இக் கூட்டத்திற்கு வருபவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள்தான்.  அல்லது கூட்டத்திற்கென்று நமக்குத் தெரிந்தவர்களைக் கூப்பிட்டு கூட்டம் நடத்துவது.

அந்த முறைபடி 24.072017 (அதாவது திங்கள் கிழமை) மாலை 6 மணிக்கு  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்தோம்.அப் புத்தகத்தை உருவாக்கிய ஸ்ரீதர்-சாமா கலந்து கொண்டார்.

அதேபோல் ரமணர் சமாஜிலீந்து வைத்தியநாதன், ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  வைத்தியநாதன் சின்ன வயதில் ரமணரைப் பார்த்திருக்கிறார்.  ரமண சமாஜ்ஜை மேற்கு மாம்பலத்தில் திறமையாக நடத்திக்கொண்டு வருகிறார்.

வாழ்க்கையில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுவிட அதைச் சரி செய்ய திருவண்ணாமலை ரமண ஆச்சிரமத்திற்கு பலமுறை சென்று வந்ததாக ஸ்ரீதர் சாமா குறிப்பிட்டார்.

அவர் ஒருவிதத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரர்.  அவரைத் திரும்பவும் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்க வேண்டுமென்று ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகம் கொண்டு வந்துள்úள்ன்.  இனிமேல் அவர் எழுத ஆரம்பிப்பார் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம் அவர்கள் புத்தகப் பிரதியைக் கொடுக்க அதை வைத்தியநாதன் வாங்கி உள்ளார்.  கூட்டம் இனிதாக நடந்து முடிந்தது. ரமணரின் முக்கியமான அறிவுரை என்ன என்றால் நான் யார் என்று யோசிப்பது? ஸ்ரீதர்-சாமா ரமணர் ஏதோ மிர்ராக்கிள் பண்ணுவதாக புத்தகத்தில் எழுதவில்லை.  ரமணர் மூலம் வாழ்க்கையை இன்னும் புரிந்துகொள்ளும் வழி முறைகளை வெளிப்படுத்தி உள்ளார். படிக்க சுவாரசியமான இப் புத்தகம் விலை ரூ.70 தான்.  ஸ்டால் எண் 12ல் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன