மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர்  

தவளைக் கவிதை

பிரமிள்

 

தனக்குப் புத்தி

நூறு என்றது மீன்

பிடித்துக் கோர்த்தேன்

ஈர்க்கில்

தனக்குப் புத்தி

ஆயிரம் என்றது ஆமை

மல்லாத்தி ஏற்றினேன்

கல்லை.

üஎனக்குப் புத்தி

ஒன்றேý

என்றது தவளை

எட்டிப் பிடித்தேன்

பிடிக்குத் தப்பித்

தத்தித் தப்பிப்

போகுது தவளைக்

கவிதை –

üüநூறு புத்தரே!

கோர்த்தரே!

ஆயிரம் புத்தரே!

மல்லாத்தரே!

கல்லேத்தரே!

ஒரு புத்தரே!

தத்தரே!

பித்தரே!

நன்றி : பிரமிள் கவிதைகள் – தொகுப்பு கால சுப்ரமணியம் – லயம் வெளியீடு, பெரியூர், சத்தியமங்கலம் 698 402 – 328 பக்கங்கள் – விலை : ரூ.130 – வெளியான ஆண்டு : அக்டோபர் 1998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன