மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 41


அழகியசிங்கர்  

 உனக்காக இவ்வுலகம்

மா தக்ஷிணாமூர்த்தி


பெண் வேண்டும்.
பெண்ணுக்குப் பண்ணிசைக்கப்
பொன் வேண்டும்.
பொன்னுக்கு மண் வேண்டும்.
மண்ணுக்கு விதை வேண்டும்.
விதை வளர நீர் வேண்டும்.
செழுமை மிக்க முலை வேண்டும்.
தேர் போன்ற அல்குல் வேண்டும்
தேரைச் செலுத்திடக் குதிரை வேண்டும்.
தேரில் புகுந்திட நான்முகன் வேண்டும்.
பாற்கடல் வேண்டும்.
தாமரை வேண்டும்.
சூர்ப்பணகை வேண்டும்.
மாற்றான் மனைவி வேண்டும்.
ஆற்றாத துயர்க்கடல் நீந்திப் பின்
மீளாத துயில் வேண்டும்.
பெண்ணே, எனக்காக நீ.
பின் உனக்காக இவ்வுலகம்.

நன்றி : திவ்யதர்சனம் – மா தக்ஷிணாமூர்த்தி – கவிதைகள் – விற்பனை : ஜெயகுமாரி ஸ்டோர்ஸ், கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629 001 – விலை : ரூ.7 – முதல் பதிப்பு : பிப்ரவரி 1976

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன