கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

கொடும்பாவி





ப கங்கைகொண்டான்                         






காய்ந்த வைக்கோலால்
கட்டி வைத்துத்
துணி போர்த்தி
கரித்துண்டால்
அரக்கிப் பல்வரிசை
அரக்கன் கொடு மீசை
உடல் முழுதும்
கறுப்புத் தார் அங்கி
தாரை தப்பட்டை
தரங்கெட்ட ஒப்பாரி
செருப்புப் பூக்களால்
செய்த மலர்மாலைச்
செண்டாக்கி
எரியூட்ட
இழுத்து நடப்போரே-
எதற்குக் கொடும்பாவி?
எரிக்கின்ற உடலுக்கோ
இளகாத மனதுக்கோ?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன