குருவும் சிஷ்யனும்

நவம்பர் 1970   –  கசடதபற இரண்டாவது இதழ்

க. நா. சுப்ரமண்யம்

கை நீட்டித் தலையில் வைத்து
உபதேசம் செய்து முடித்த
குருவை வணங்கி
நஇடத்தமர்ந்த சிஷ்யனை
‘விளங்கிற்றா?’
என்று குரு வினவ’விளங்கிற்று’
என்று சிஷ்யன்கூற
‘என்ன விளங்கிற்று
எனக்கும் சொல் ‘
என்று சகபாடி கேட்டான்
‘குருவே சொல்வார்’
என்று பதில் வந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன