வயதான பெண்மணி

அழகியசிங்கர்

அந்த வயதான பெண்மணி
இறந்து போய்விடுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்

நான் அப்படி இருக்க முடியாது என்று யோசித்தேன்

எல்லாவித சக்திகளையும் இழந்து
படுத்துக் கிடக்கிறாள்..
சிலநாட்கள் கண்களை பாதி மூடி
நினைவுத் தப்பிப் போய்..

உடலுக்குத் தேவையான சோடியம் குறைந்து விட்டதாம்..
பழையபடி ஆகலாம்….சொல்லமுடியாது என்கிறார்கள்
மருத்துவர்கள்…

தீவிர சிகிச்சைப் பிரிவில்
தொடர்ந்து படுத்துக் கிடக்கிறாள்
வயதான பெண்மணி…

மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது
அப்படி இருக்கக் கூடாது

திரும்பவும் அந்த வயதான பெண்மணி
எழுந்து வரவேண்டும்

03.09.2012

“” இல் ஒரு கருத்து உள்ளது

  1. அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

டி.கே.தீரன்சாமி. உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன