இரண்டு கவிதைகள்

கொல்லும் முகம்

சுழலும் விழிகளில் நீ஡ ஏனோ?
கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ!
மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் –
உன்முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?

தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்!
தெரிந்ததில்லை – பருவமதில் – மாற்றத்தில் –
தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?
இயம்புமோ உன்முகம்தான் அதைப்பற்றி?

என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே!
என் சிந்தையில் படர்ந்த கோடிப் பூவே
என் மூளையில் பூத்த வெண்மலரே!
உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.

இன்னொரு கவிதை

அழிவுப் பாதையில் பயணம் –
இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு –
தொடுவானம் கண்டது!
ஆக்கப் பாதையில் பயணம் –
செளகரியங்களின் நிரந்தரத்திறகான – கதறலோடு
பட்டமெனப் பறக்கவும் –
ஆதூரம் கொண்டது
ரொம்ப நாட்கள் கழித்து-
ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன் –
அழிவுப் பாதையும் –
ஆக்கப் பாதையும் –
தெரியாத இடத்தில் –
களைத்து!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன