என்னை ஆளும் விலங்குகள்



எல்லாமாயும் எனக்குள்ளேஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்பூசி மெழுகும் சொற்களெதுவும்அவையிடத்திலில்லைசில மீன்களைப் போல அமைதியாயும்இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்சில நேரங்களில் மட்டும்எறும்பு, தேனி, கரையான்களைப் போலசுறுசுறுப்பாகுபவையுமுண்டு காலத்தைப் பயனுள்ளதாக நகர்த்திப் போவதாகப் பெருமை பேசிதிரும்பிப் பார்க்கையில் தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்கோபமுறுகையில் சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும் நன்றி மறப்பதில் பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்புன்னகைப்பது மட்டும் மனிதத்தை ஒத்திருக்கிறது

“என்னை ஆளும் விலங்குகள்” இல் 3 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன