ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்

கதவு

இது ஒரு காலம்
யாராலும்
நிச்சயம் கொள்ள இயலவில்லை
எதைப்பற்றியும்
கதவை
திறந்து வைப்பதா அல்லது
மூடி விடுவதா என்பதையும் கூட

ஒவ்வொரு முறையும்
கதவைத் திறக்கும் போதும்
சிறிதே தயங்குகின்றன கைகள்

மீண்டும் மீண்டும்
நிச்சயம் கொள்ள முடியாமலே போய்விடுகிறது எனக்கு

நான் இருப்பது

கதவுக்கு
இந்தப் பக்கமா அல்லது
அந்தப் பக்கமா?

(ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன