ஒரு கவிதை

சைக் கருவி செய்திருக்கும்
மரத்தில் மீதமிருக்கும் பறவையின் பாடல்
கேட்கும் ப்ளுட்டோ இரவில்

சோதனைக் குழாய் குழந்தையின்
இதயம் துடிக்கத் துவங்குகிறது

அலை
தோலுரிக்கும்
கடல் அரவத்துடன்

கனவுகள் தோறும்
அலைந்து கொண்டிருக்கிறது
உடல் கொள்ளத் துவங்கும் உயிர்

முயலின் காதுகளாய் வளர்ந்து கொண்டிருக்கிறது
பற்றிக் கைக்கொள்ள யேதுவாய்

கடல் தாவரத்தின் சுவாசம்
மீளுருக் கொள்ளுதல்

“ஒரு கவிதை” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. அன்புள்ள அழகியசிங்கர் அய்யா,

    மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன்

    எனது கவிதையை தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.

    சக படைப்பாளிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

என்.விநாயகமுருகன் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன