ஒன்ஸ் மோர்

அவனுக்கு மட்டும் எப்படிதபால்பெட்டியில் கார்டு மாதிரிதன் உடம்பைக் கிணற்றுக்குள்போட்டுவிட முடிகிறது?
தன் வாழ்வைக்குப்பைக் கடுதாசி போல்எட்டாம் மாடியிலிருந்துவிட்டெறிந்து விட முடிகிறது?
தற்கொலை செய்து கொள்வது,தண்ணீரில் குளிப்பதைப் போல்மனசில் ஒட்டாத விஷயமா?
உயிர் வெறும் எச்சிலா’பச்’ சென்று துப்பிவிட?
பிறவியில்உயிரை உடம்புக்கு வெளியில்ஒட்டிக்கொண்டு வந்தானாஆறாவது விரலாக?வேண்டியபோது வெட்டி விட।
பட்டப் பகலில்,முன் கூட்டியே பாலைஎதிர்த்த வீட்டில்வாங்கி வைத்துக்கொள்ளஏற்பாடு செய்து விட்டு,பின்கதவை பூனை வராமல்இழுத்து மூடி,அடுப்பில் கொதிக்கும் கிழங்குகளைஇறக்கி வைத்து மூடிவிட்டு”எதற்கும் கவலைப் படாதே,குழந்தையைப் பார்த்துக்கொள்போகிறேன்,”என்று முத்தமுடன்காகிதம் எழுதிப் பார்வைக்குத்தப்பாத இடத்தில் பத்திரப் படுத்திவிட்டு,வாசலில் சோறு வைத்துவிட்டுபொருத்தமான கறுப்பு உடுப்புகளைஇறுக்கமாகப் போட்டுக்கொண்டு,தூளிக் கயிறு, காலைவாரி விடாதவாறுஒருமுறைக்கு இருமுறைஇழுத்துப் பார்த்துவிட்டு,உத்தரக் கம்பியின்உயரத்தை அளந்து கட்டிகழுத்து முடிச்சுகளைகச்சிதமாகப் போட்டுக்கொண்டுநாற்காலியை தள்ளி விட்டுநாசூக்காய் உயிர்விட முடிகிறதுஅவனால் எவ்விதம்?
நிஜமாக இது அவனுக்குஒரே காட்சி।கடைசி காட்சி, என்றாலும்நான் அவனே போல்அடிக்கடி இக் காட்சியைஒத்திகை பார்த்துக்கொள்கிறேன் எனக்குள்மிக இயல்பானதன் முயற்சியற்ற தோற்றமாக,உலகம் என்னிழப்பால்உருகி ஓலமிட வேண்டுமென்றபேராசையால்அல்லும் பகலும் அக்கறையாய்நான் காட்சிகளின் கோர்வைகளைமனனப் படுத்துகிறேன்। திரும்பத் திரும்ப,இருந்தாலும்,வேளைகளில் விளக்கணைந்துகாட்சி மாறும் கண்ணிமைப்புநேரத்தில,நான் தப்பி ஓடிப்போய்பார்வையாளர் முதுகுக்குள்பதுங்கிக்கொண்டு விடுகிறேன்।என்னையும் மீறி।என் மறைவால்எவனுக்கும் கவலை தோன்றவில்லை।
ஓரத்தில் தயாராய் காத்திருக்கும்கறுப்பான ‘டூப்’ நடிகன்,நாற்காலியை உருட்டிவிட்டுநாக்கு நீண்டு தொங்குகிறான்।மேடையில்।உச்ச வியப்பால்உருக்கமான காட்சியால்உலகத்தில் பார்த்தவர்கள்”ஒன்ஸ் மோர்” என்று கத்துகிறார்கள்எனக்கு விதித்திருந்தஅனுதாபத்தை அபகரித்துவிட்டநடிகனை கோபத்தால் ஓயாமல்கொலை செய்கிறேன்।நாற்காலியை உலகத்திற்கு எதிரேநிமிர்த்தி வைத்து,காட்சிக்கு என்னைமீண்டும் தயார் செய்து கொள்கிறேன்’ஒன்ஸ் மோர்।’ (சமீபத்தில் விருட்சம் கவிதைகள் தொகுதி 2 என்ற பெயரில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 1993-1997 வரை உள்ள காலகட்டத்தில் விருட்சத்தில் பிரசுரமான கவிதைகளின் தொகுதி இது. 93 கவிஞர்களின் கவிதைத் தொகுதி இது. இத் தொகுதியில் உள்ள வைதீஸ்வரின் கவிதை இது.)
1

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன