ஏழு வரிக் கதை

ஆயிரங்கால் மரவட்டை
நகுலன்



மணி4.30 ஆகிவிட்டது.  வெளியில் போக ஒரு பரபரப்பு.  வேறு காரணமும் உண்டு.  
சென்ற வழியில் நண்பனைச் சந்தித்தேன்; அவனும் என்னைப் போல ஒரு புஸ்தகப் பிரியன்.  அப்பொழுதுதான் üüகரிச்சான் குஞ்சுýý வின் üüபசித்த மானிடம்ýý படித்து முடித்திருந்தேன்.  அதை யாரிடமாவது சொல்லி என் அகமகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று ஒரு துடிப்பு.  நானும் அவனும் கரிச்சான்குஞ்சுவின் படைப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.  அவனும், üகரிச்சான் குஞ்சுýவின் சிறுகதைகளைப் படித்திருக்கிறான்.
அப்பொழுது நீ வந்து சேர்ந்தாய்; பேச்சு பரிசு கொடுக்கும் ஸ்தாபனங்களைப் பற்றித் திரும்பியது.  எந்த எந்த ஸ்தாபனத்தில் எப்படி எப்படி இந்தப் பரிசு விஷயம் நிச்சயிக்கப்படுகிறது என்பதில் பேச்சுத் திரும்பியது. 
ஆலோசனைக்குழு, காரியக் கமிட்டி, இவற்றில் எதில் எதில் யார் யார் இருக்கிறார்கள், இவரில் யார் யாரைவிட முக்கியம், பரிசு பெற என்ன என்ன தகுதிகள், எதை எதை எப்படி எப்படிச் செய்யவேண்டும் என்றெல்லாம் பேச்சுத் திசை மாறிப் போனதும், என் நண்பன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.  நான், “பேசிக் கொண்டிருங்கள்.  எனக்கு நூல் நிலையத்திற்கு 7 மணிக்கு முன் போக வேண்டும்,” என்று அங்கிருந்து மெல்ல நழுவி விட்டேன்.  என் நண்பன் அடுத்த நாள் நான் அவனைக் கண்டால் அவன் என்னைத் திட்டுவான் என்பது எனக்குத் தெரியும்.
மரவட்டை, தான் எப்படி நகர்கிறது என்று, தன் இயல்பாக-இயங்கும் தன்மையைச் சற்று மறந்து, யோசனையில் ஆழ்ந்தபோது, அதற்கு ஆயிரங்கால்கள் இருந்தும், அசைய முடியாமல் முடமாகிவிட்டது என்றுதான் சொல்கிறார்கள்.  
(நன்றி : கவனம் ஜøன் 1981)

குமரகுருபரன் என்ற கவிஞர்

அழகியசிங்கர்


குமரகுருபரன் என்ற கவிஞர் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்தது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது.  உண்மையில் எனக்கு அவர் யார் என்று தெரியாது.  சமீபத்தில் எழுதுபவர்களில் பல படைப்பாளிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் பலருடைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருகிறேன்.  குறிப்பாக கவிதைத் தொகுதிகளை வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன்.  யார் இந்த குமரகுருபரன் அவர் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவார் என்றெல்லாம் தெரியாது.   அவருக்கு இயல் விருது கிடைத்த செய்தியை அறிந்தபோது அவரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தேன்.  யூ ட்யூப்பில் அவருடைய புத்தக வெளியீட்டு விழா நடந்த விபரம் அறிந்து பார்த்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் இந்திரன் பேசியதையும் பார்த்தேன். இப்போது இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறது.  முன்பு அதெல்லாம் கூட சாத்தியம் இல்லை.  இப்படித்தான் சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. நான் படித்த காஸ்டினேடா புத்தகங்களில் üமரணம்தான் உன் எதிரிý  என்ற வாக்கியம் இன்னும் கூட என்னால் மறக்க முடியாதது.  இதை விவரிக்கிறபோது சூழ்நிலை எப்படியெல்லாம் சுழன்று போய்க் கொண்டிருக்கிறது என்று அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும்.  மரணம் எப்படி ஒருவரை சூழ்ந்துகொண்டு நெருக்கம் கொடுக்கிறது என்பதை விவரித்தபடி சென்று கொண்டிருக்கும். மரணத்தின் முன் நாமெல்லாம் பகடைக் காய்கள்தான். ஒன்றும் செய்ய முடியாது.
‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது’ என்பது அவருடைய கவிதைத் தொகுதியின் தலைப்பு.  புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று தூண்டுகிற தலைப்பு. 
இத் தருணத்தில் சங்கர ராம சுபபிரமணியன் 1998ல் விருட்சத்தில் எழுதிய கவிதைகளை இங்கு அளிக்கிறேன்.
மரணம் பற்றிய இரண்டு குறிப்புகள்
1. ஏதோ ஒரு
சமனற்ற நிலையில்
காகத்தின் இறக்கை
பட்டும்
என் மரணம் 
நிகழக்கூடும்.
2. சாவை
கை விரித்து, நாதுருத்தி
சிறுமி நிகழ்த்தி
காட்டியது இன்னும்
பயமுறுத்துகிறது.

ஓர் உரையாடல்

 அழகியசிங்கர்

 

பால்கனியிலிருந்து வேடிக்கைப் பார்ததுக் கொண்டிருந்தார் அழகியசிங்கர். தெருவில் தூரத்தில் ஜெகனும், மோகினியும் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை ஆட்டினார்.  அவர்களும்.
வீட்டிற்குள் வந்தவுடன் முதல் கேள்வி ஜெகனிடமிருந்து.  ýýஏன் நீங்கள் இப்போதெல்லாம் வெளியே வருவதில்லை.
 அழ கியசிங்கர் :     அப்பாதான…
மோஹினி :  இப்போது எப்படி இருக்கிறார்?
அழகியசிங்கர் :  அப்படியேதான் இருக்கிறார்.  என்ன சில நாட்கள் இரவில் சத்தம் போட்டு கூப்பிடுவார்.  சில நாட்கள் அவர் இருப்பதே தெரியாது.
ஜெகன் : கஷ்டம்தான்.
மோஹினி :  உங்களுக்கு வெளியே போக வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?
அழகியசிங்கர் : ஆமாம்.  நான் வெளியூர் சென்று ஒரு வருடம கூட ஆகிவிடும் போல் தோன்றுகிறது.  எந்தக் கூட்டத்திற்கும் சென்றாலும் என்னால் 3 மணி நேரம 4 மணிநேரம் என்று இருக்க முடியாது.
ஜெகன் :  எதிர்பாராதவிதமாக நடந்த புததகக் காட்சியைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அழகியசிங்கர் : புததகக் காட்சியின்போது உண்டான உஷ்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  எனக்கு உதவி செய்த நண்பருக்கும் என் வயதுதான்.  அவரை நினைத்து எனக்கு ஆச்சரியம். 
மோஹினி :  உங்கள் வயதில் புத்தகக் காட்சி நடத்துபவர்க்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?
ஜெகன் :  புத்தகமும் விற்க முடியவில்லை என்றால் இன்னும் ஏமாற்றமாக இருக்கும்.
அழகியசிங்கர் :  அடிப்படை வசதி கொஞ்சம் குறைவுதான்.  முதியவர்கள் ஸ்டாலைப் பார்க்க புத்தகக் காட்சிக்குள்ளேயே ஒரு மூவிங் வண்டி வைத்திருக்க வேண்டும்.  
மோஹினி : சனி ஞாயிறுகளில் காலையிலிருந்து ஒருவர்ஸ்டாலைப் பார்த்துக் கொள்வது என்பது கஷ்டம்தான்.
அழகியசிங்கர் :  எனக்கு உதவி செய்த நண்பர் அதைத் தண்டனையாக நினைக்கவில்லை.  அதை விரும்பி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு என் நன்றி எப்போதும் உண்டு.
ஜெகன் : அவர் பெயரை சொல்ல மாட்டீரா?
அழகியசிங்கர் :  அவர் பெயரை அடிக்கடி சொல்வதுண்டு.   சொல்கிறேன்.  கிருபானந்தன்தான் அவர் பெயர்.
மோஹினி : புத்தகக் காட்சி என்பதே ஒரு வியாபாரம்.  கோடிக்கணக்கில் புத்தகங்கள் விற்கும் வியாபாரம்.  
ஜெகன் :  இந்த முறை குஷ்பு வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் வந்து அசத்தி விட்டார்கள் போலிருக்கிறது. 
மோஹினி :  அப்படியெல்லாம் அழைத்து வந்து புத்தகம் விற்க டிரிக் செய்கிறார்கள்.  
அழகியசிங்கர் :  புத்தகம் என்பது அறிவு சம்பந்தமான விஷயம்.  அதை எடுத்துப் படிக்க வேண்டும்.  சோப்பு வியாபாரத்திற்கு விளம்பரம் செய்வது போல் செய்யக் கூடாது.
மோஹினி :  வேற வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது.  புத்தகத்தை எப்படித்தான் விற்பது?
ஜெகன் :  உண்மைதான்.  நீங்கள் என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?
அழகியசிங்கர் : விலை மலிவாகக் கிடைத்த ஆங்கிலப் புத்தகங்கள். 
ஜெகன் :     கவிதைப் புத்தகம் விற்றிருக்காதே?
அழகியசிங்கர் :   நான் கொண்டு வந்த நான்கு புத்தகங்களில் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைப் புத்தகம்தான் அதிகம் விற்றது.
ஜெகன் :   எத்தனைப் பிரதிகள்?
அழகியசிங்கர் :  தயவுசெய்து கேட்காதீர்கள்.  எத்தனைப் பிரதிகள் என்பதை சொல்ல விரும்பவில்லை. 
மோஹினி :  நீங்கள் சொல்லாமல் இருந்தால், எத்தனைப் பிரதிகள் என்று எல்லோருக்கும் கேட்கத் தோன்றும்.
அழகியசிங்கர் :        சொல்ல விரும்பவில்லை.  இந்தப் புத்தகக் காட்சியினால் முதல் முறையாக விருட்சம் புத்தகங்கள் அதிகமாக விற்றது.  இனிமேலும் அது தொடர வேண்டும்.  
                      இந்தப் புத்தகக் காட்சியின்போது நடந்த ஒரு சோக நிகழ்ச்சியையும் பகிர்நது கொள்ள விரும்புகிறேன்.  என் எழுத்தாள நண்பர் ஐராவதம் மனைவியும் இந்த மாதம் மூன்றாம் தேதி இறந்து விட்டார்.  ஐராவதம் இறந்து 2 ஆண்டுகள் ஓடி விட்டன. 
மோஹினி, ஜெகன் : அவருடைய ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம். 

நூறு ருபாய்க்கு நான்கு ஆங்கில நாவல்கள்

அழகியசிங்கர் 

ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது  புத்தகம் விற்பதோடல்லாமல் புத்தகம் வாங்குவதும் என் வழக்கம்.   சிலர் கிண்டல் அடிப்பார்கள்.  üநீங்கள் புத்தகம் விற்பதை விட, வாங்குவதுதான் அதிகமாக இருக்கிறது,ý என்று.  இந்த முறை அடித்த ஜோக்.  எல்லோரையும் போட்டோ எடுப்பதற்காகவே புத்தகக் கடையைத் திறந்து வைத்திருப்பதாக.

யுனிவர்சல் என்ற பெயரில் ஒரு கடை.  அங்கு ஆங்கிலப் புத்தகங்களை கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள்.  ரூ.100 க்கு 4 ஆங்கிலப் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளலாம். எனக்கு ஆச்சரியம்.

கடைக்குள் புகுந்து தேடினேன்.  எனக்குப் பிடித்த 4 புத்தகங்களை அவசரம அவசரமாக எடுத்தேன்.  அதில் ஒன்று   KISS என்கிற  ED MCBAIN புத்தகம். எனக்குப் பிடித்த எழுத்தாளர் எட் மெக்பெயின்.  திரில்லர் கதைகளை எழுதும் வல்லவர். இவருடைய ஒரு கதையை உலக அளவில் பிரபலமான ஜப்பான் டைரக்டர் அகிரா குரசோவா ஹை அன்ட் லோ என்ற பெயரில் படம் எடுத்துள்ளார்.  அந்தப் படம் பார்த்ததிலிருந்து எட் மெக்பெயின் புத்தகங்களைப் பார்த்தால் உடனே வாங்கிவிடுவேன்.

இந்தப் புத்தகக் காட்சியில் கிடைத்தது கிஸ் என்கிற திறமையாக எழுதப்பட்ட புத்தகம்.  இதோ நான் வாசிக்க தொடங்கி விட்டேன்.  மற்ற மூன்று புத்தகங்கள் : CALL ME ANNA .The Autobiography of PATTY  DUKE. URSULA K LEGUIN – The Farthest Shore, V C ANDREWS – My Sweet Audirna




வரவே மாட்டார்கள்……

அழகியசிங்கர்

எங்கள் வீட்டு வாசலில் உள்ள இளைஞர்கள் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள்.   தினமும்.  எதாவது ஒரு விளையாட்டு.  என் வீட்டு வாசலில் அவர்கள் போடும் கூச்சல செவிப்பறையைப் பிளந்துவிடும்.  பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடுவார்கள்.  அல்லது பந்தை தூக்கிப் போட்டு விளையாடுவார்கள்.  கேட்டைத் திறந்து என் வீட்டிற்குள் நுழைந்து கலாட்டா செய்வார்கள்.   நான் பால்கனியிலிருந்து சத்தம் போடுவேன்.  
ஒருமுறை வீட்டு வாசல் படிக்கட்டில் இருந்து ஸ்மார்ட் போனை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  பத்து பேர்களாவது ஒரே விளையாட்டை ஸ்மார்ட் போனில் விளையாடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.  ராத்திரி பத்து மணிக்கு மேல் இது மாதிரியான விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  நான் வீட்டு வாசலில் இப்படி விளையாடக் கூடாது என்று சத்தம் போட்டேன்.   போய் விட்டார்கள்.இருபது வயதுக்கு மேல் உள்ள இந்த இளைஞர்கள் கல்லூரி படிப்பவர்களாக இருக்கிறார்கள்.  அல்லது படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள்.  இது மாதிரியான இளைஞர்கள் ஒரு ரகம்.
இன்னொரு ரகம் இவர்களை விட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்.  அவர்கள் போடும் கூச்சல் இன்னும் அதிகம்.ஓடி ஓடி அவுட் என்று கத்தி கத்தி விளையாடுவார்கள்.  கட்டுப்படுத்தவே முடியாது.  
புத்தகக் காட்சிக்காக இந்த இளைஞர்களில் யாராவது வந்து உதவி செய்தால் நன்றாக இருக்குமே என்று ஒருவனைப் பார்த்து கேட்டேன்.  ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?ý என்று.  அவன் சொன்னான்: üமெக்கானிக் இனஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடுகிறேன்,’ என்று. ‘சும்மாதானே இருக்கிறாய்…ஒரு வேலை கொடுக்கிறேன் வருகிறாயா,’ என்று.  ‘என்ன வேலை?’ என்று கேட்டான்.  
‘புத்தகக் காட்சிக்கு வர வேண்டும்.  13 ஆம் தேதி வரைதான்..’
அவன் புத்தகம் என்றவுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.   வெட்டியாய் 24 மணிநேரமும் தெருவில் விளையாடிக்கொண்டே இருக்கும் இவர்கள், எந்தப் புத்தகக் காட்சிக்கும் வர மாட்டார்கள்.  புத்தகம் படிக்கவும் மாட்டார்கள். சிலாகித்துப் பேசவும்  மாட்டார்கள்.  
புத்தகக் காட்சியில் கலந்து கொண்ட என் நண்பர்களுக்கு நான் மார்க் போட விரும்புகிறேன்.
க்ருபானந்தனுக்கு 99%
மலைச்சாமிக்கு 30% (சனி ஞாயிறு மட்டும் வந்தார்)
என் கல்லூரி நண்பர் சுரேஷ÷ற்கு 25% (ஞாயிறு திங்கள் வந்தார்)
எனக்கு 45% (மாலை நேரம் மட்டும் வர முடிந்தது)
கால சுப்பிரமணியத்திற்கு : 3% 
பெருந்தேவி : 5%
வேம்பு : 2%
இந்தப் புத்தகக் காட்சியில் விருட்சம் எதிர்பார்த்தத விட அதிகமாக விற்றது.  அதனால் என் ஸ்டால் முழுவதும் விருட்சம் புத்தகமே விற்கலாம் என்று தோன்றுகிறது.
நான் ஒவ்வொரு ஆண்டும் என் புத்தகக் காட்சியில் வருபவர்களைப் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரித்து வைத்துக்கொள்வேன்.  இந்த முறையும் அப்படி செய்ய உத்தேசம்.
புத்தகக் காட்சியில் கிடைக்கும் புத்தகங்களையும், வாங்கும் புத்தகங்களையும் படித்து அடியேனுக்கு தெரிந்ததை எழுத உத்தேசம். என்ன புத்தகம் என்பதை லிஸ்ட் போடடு தெரிவிக்கிறேன்.
புத்தகம் வாங்க வந்தவர்களுக்கும், உதவி செய்த நண்பர்களுக்கும் நன்றி.

புத்தகக் காட்சி கற்றுத் தரும் பாடம்

அழகியசிங்கர்

ஒவ்வொரு முறையும் சென்னைப் புத்தகக் காட்சி எனக்கு பாடம் கற்றுத் தர தவறுவதில்லை.  இந்த முறையும். என் நோக்கம் புத்தகங்களைப் பதிப்பித்து லாபம் சம்பாதிப்பது அல்ல.  அப்படியே அதுமாதிரியான நோக்கம் இருந்தாலும் அது நிறைவேறப் போவதுமில்லை. என்னை விட பல பேர்கள் இதில் கில்லாடியாக இருக்கிறார்கள். விருட்சம் வெளியீடாக நான் கொண்டு வருவது ஐம்பது அறுபது தலைப்புகளில் அடஙகிவிடும்.  அதில் பெரும்பாலும் கவிதைத் தொகுதிகள்.  
கிட்டத்தட்ட 800 கடைகள் கொண்ட இந்தப் புத்தக ஸ்டால்களைப் பார்க்குமபோது ஆச்சரியமாக இருக்கிறது.   பல இடங்களை முழுதாகப் பார்க்க முடியவில்லை.  எல்லோரும் விதம் விதமாய் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள்.  என் மனம் துள்ளாமல் இல்லை. 
நான் வெளியிட்டுள்ள கொஞ்சமாகக் கொண்டு வந்துள்ள புத்தகங்களை ஒரு டேபிள் முழுவதும் நிரப்பிவிட்டு மற்ற பதிப்பாளர்களின் புத்தகங்களையும் அடுக்கி வைத்துள்ளேன்.  
புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை எனக்கு யார் யாரோ உதவி செய்திருக்கிறார்கள்.  இன்னும் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.   முதன் முதலாக ஆரம்பித்தபோது என் உறவினர் ஒருவர் உதவி செய்திருக்கிறார்.  என் அலுவலக நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள். எனக்கு புத்தகங்களை அடுக்குவதில் கூட எந்தவித சாமர்த்தியமும் இல்லை  
புத்தக ஸ்டாலில் அமர்ந்து கொண்டு யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்த பின் யாரும் வராமல் போவதுபோல சங்கடம் வேற எதுவுமில்லை.  
நான் பப்பாசி உறுப்பினராக இல்லாதபோது ஒரு ஆண்டில் நடந்த புத்தகக் காட்சியின்போது எல்லாப் புத்தகங்களையும் ஒரு சாக்கில் போட்டுக்கொண்டு தெரிந்தவர்கள் கடைகளில் புத்தகங்களை விற்கக் கொடுப்பேன். ஒன்றும் விற்காது.  பின் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு போய் விடுவேன்.   கடைகளில் விற்று பணம் வாங்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். 
ஒரு முறை தீ விபத்தில் நகுலனின் இரு நீண்ட கவிதைகள் புத்தகமும், உமாபதியின் வெளியிலிருந்து வந்தவன் புத்தகமும் போய்விட்டன.  
நான் உறுப்பினராக சேர்ந்தபிறகு அலுவலகத்தில் இருந்துகொண்டு புத்தகக் காட்சியை நடத்துவது என்பது தடுமாற்றமாகவே இருந்தது.   இது பெரிய பொறுப்பு.  நான் பக்கத்தில் இல்லாமல் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போது பரபரப்பாக இருக்கும்.  பின் எல்லாம் சரியாகிப் போய்விடும்.  ஒவ்வொரு ஆண்டும் விற்பனை ஒவ்வொரு விதமாக இருக்கும்.  ஒரு லட்சத்தைத் தொடுவது என்பது சாதாரண விஷயமாகத் தோன்றாது.  ஒரு ஆண்டில் என் புத்தகக் காட்சியின் விற்பனை ரூ25000 மட்டுமே. 13 நாட்கள் அதற்கு நான் பட்ட சிரமங்கள் ரொம்ப அதிகம்.  
இன்னொரு முறை மயிலாடுதுறையிலிருந்து சென்னை வந்த என் பெண் குடும்பம் விபத்தில் சிக்கியது.   புத்தகக் காட்சியை நடத்திக் கொண்டிருந்த நான்,  புத்தகக் காட்சிக்கு போக முடியவில்லை.  என் நெருங்கிய நண்பர்கள் புத்தகக் கடையைப் பார்த்துக் கொண்டார்கள்.  அன்று எதுவுமே விற்கவில்லை. 
சென்னையைத் தவிர வெளியூர்களில் நடக்கும் புத்தகக் காட்சிகளுக்கு என்னால் போக முடியவில்லை.  அலுவலகத்திலிருந்து பதவி மூப்பு அடைந்து வந்தபிறகு நான் ஒருவனே எல்லாவற்றையும் சமாளிப்பேன் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன்.  ஆனால் அது எந்த அளவிற்கு பொய்யான கற்பனை என்று தோன்றியது.  
ஒவ்வொரு முறை என் அப்பா புத்தகக் காட்சியில் எந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் புத்தகம் விற்கிறது என்று கேட்டுவிட்டு  தூங்குவார். நானும் உற்சாகமாக சொல்வேன்.  அந்தத் தொகை அதிகம் இருக்காது என்றாலும்.
இந்த முறை அப்பாவிற்கு உடம்பு சரியில்லை.  ஒரு அறையில் படுத்தப் படுக்கையாக இருக்கிறார்.  அவருக்கு 94 வயது.  கடந்த பல மாதங்களாக ராகவன் காலனியை விட்டு வெளியூர் எங்கும் நான் செல்வதில்லை.  இந்தத் தருணத்தில் என் மனைவி புத்தகக் காட்சியில் பங்கு பெற வேண்டாமென்று தடுத்தாள்.  நான் அவள் பேச்சைக் கேட்கவில்லை.  ஆனால் என்னால் முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை.  அப்பா ராத்திரி முழுவதும் கத்துவார்.  என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். என் தூக்கம் ராத்திரி கெட்டு விடுகிறது.  அதனால் நான் புத்தகக் காட்சிக்குப் போவது தடுமாற்றமாக இருக்கும்.  தீவுத் திடலில் இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் காட்சி எதிர்பாராத சிரமமாக உள்ளது.  வெயிலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னால் மழைப் பெய்து கொட்டு கொட்டென்று கொட்டியது.  என் ஸ்டாலுக்கு எதிரிலுள்ள ஸ்டால்களில் உள்ள புத்தகங்கள் வீணாகி விட்டன.  மழையின் வேகத்தைப் பார்த்து நானும் பயந்தபடியே உட்கார்ந்தேன்.  அந்த சமயத்தில் கிருபாகரன் இல்லை. புத்தகக் காட்சி கட்டமைப்புக்கு எதாவது ஆபத்து ஏற்படுமோ என்றெல்லாம் தோன்றியது.  ஆனால் ஒன்றும் ஆகவில்லை.
இந்த முறை இலக்கியத்தில் ஆர்வமுள்ள கிருபாகரன் என்ற 62 வயது இளைஞர்தான் (என் வயதும் அதேதான்) எனக்கு உதவி செய்கிறார்.  அவர் கொடுக்கும் உற்சாகம் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.  போன சனி ஞாயிறுகளில் மலைச்சாமி என்ற இளைஞரும் உதவி செய்தார்.   
நான் சில தினங்களுக்கு முன்னால் முகநூலில் எழுதியதைப் படித்து கிருபானந்தம் அவர் கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.  இதோ இங்கே:
நான் : என் புத்தக ஸ்டாலில் புத்தகங்களைக் கொண்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
கிருபா : சற்று மிகை.  கடைசி என்றாலும் சுமார் பத்து கடைகள் இருக்கும் தூரத்தில் ஒரு வாயில் வரை வேனை கொண்டு சென்று அங்கிருந்து உதவியாளர் இரண்டு பெட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கி வநது வைத்தார்.  மற்ற பெட்டிகளை ட்ராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து விட்டார்.
நான் : ஏனென்றால் என் ஸ்டால் இருக்கும் வரிசை ரொம்ப நீளமானது.  அதில் கடைசீ..
கிருபா : கடைசி என்பது சரி.  எல்லா வரிசைகளும் ஒரே நீளம்தான்.
நான் : புத்தகம் வைக்க பெரிய மேஜைகளைத் தேட வேண்டியிருந்தது.  ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக மிக நிதானமாகத்தான் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருந்தது.  
கிருபா : இநதச் சிரமம்கூட இல்லாமல் புத்தகங்கள் தானே மேசைகளைத் தேடி எடுத்துவந்து தங்களை அடுக்கிக் கொண்டால் நாமெல்லோரும் பயந்து ஓடிவிடுவோம்.
நான் : எனக்கு உதவிசெய்யும் கிருபானந்தன் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மடமடவென்று புத்தகங்கள் எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விடுகிறார்.
கிருபா : மிகச் சரி.  அப்போது நீங்கள் அலட்டிக் கொள்கிறீர்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலம.
நான் : நாங்கள் இருந்த பக்கத்தில் காற்றே இல்லை.  ஒரு பேனிலிருந்து வரும் காற்றை நம்பி ப்ளாஸ்டிக் நாற்காலியை நகர்த்த வேண்டியிருந்தது.
கிருபா :. அரங்கத்தில் புத்தகக் கட்டுகளை தூக்கி வந்த பணியாளர்கள் நாமிருக்குமிடத்தில் உள்ள மின் விசிறியின் கீழ் வந்து காற்று வாங்குமளவிற்கு காற்று இருந்தது.
நான் : கிருபாவிற்கும் எனக்கும் ஒரே வயது.  அவர் சமாளித்துக் கொண்டு இருந்தார்.
கிருபா : சமாளித்துக் கொண்டிருந்தார் என்பது சரியல்ல.  இந்த அளவுகூட முயற்சியில்லாமல் ஒரு வேலை நடக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.
நீங்களே சொல்லுங்கள் சென்னைப் புத்தகக் காட்சி கிருபானந்தன் மூலம் எனக்குப் பாடம் கற்றுத் தருகிறதா இல்லையா? 
  

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து

அழகியசிங்கர் 

2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டாலில் ராம் காலனி என்ற என் சிறுகதைத் தொகுதியை  அசோகமித்திரன் வெளியிட அதை ஞானக்கூத்தன் பெற்றுக் கொள்கிறார்.  அன்று என் ஸ்டாலில் ஏகப்பட்ட கூட்டம்.  சா கந்தசாமி, நாஞ்சில்நாடன், மலர் மன்னன், க்ருஷாங்கினி, ஆர் ராஜகோபாலன், அம்ஷன்குமார் என்று பல இலக்கிய நண்பர்கள் வந்திருந்தார்கள்.  ஒரு பிரதியை என் மனைவியின் சகோதரி பெற்றுக்கொண்டார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து புத்தகக் காட்சியில் பெருந்தேவியின் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள பலரை அழைத்துள்ளேன்.  
இன்று மாலை 6.30 மணிக்கு அழுக்கு சாக்ஸ் என்ற புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு ஸ்டால் 594-ல் நாம் திரும்பவும் சந்திக்கிறோம்.

இரண்டு சந்தன மாலைகள்

அழகியசிங்கர்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதவி மூப்பு அடையும்போது என் அலுவலக நண்பர்கள் எனக்கு சந்தன மாலை அணிவித்தார்கள்.  அதை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.  ஒருமுறை  விசிறி சாமியாரைப் பார்க்க திருவண்ணாமலை போனபோது அவர் தங்கிருந்த வீட்டு வாசலில் உள்ள ஆணியில் ரோஜாப்பூ மாலைகளை தூர எறியாமல் மாட்டியிருந்தார்கள்.  ரோஜாப்பூ மாலைகள் நிறம் இழந்து கருத்த நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.  ஏன் அதைத் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.  விசிறி சாமியார் ஒரு யோகி.  அதற்கு எதாவது காரணம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் சந்தன மாலை அப்படி அல்ல.  அதை எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு அணிவித்த அந்த சந்தன மாலையை இன்னும் தூக்கி எறியாமல் வைத்திருக்கிறேன்.
இப்போது இன்னொரு சந்தன மாலை கிடைத்திருக்கிறது.  படிகம் என்ற நவீன கவிதைக்கான இதழ் நடத்தும் இலக்கியக் கூட்டத்தில்.  எனக்கு ஆச்சரியம்.  பெரும்பாலும் எந்த இலக்கியக் கூட்டங்களிலும் நான் பார்வையாளனாகத்தான் இருப்பேன்.  பேசுபவனாக இருந்தாலும் மேடையில் அமர்வதில் சங்கடப்பட்டு அமர்வேன்.  ஆனால் என்னை மேடையில் உட்கார வைத்து சந்தனமாலையைக் கொடுத்து கௌரவப்படுத்திய படிகம் இதழிற்கு என் நன்றி உரித்தாகும். இதுவரை எந்த இலக்கியக் கூட்டத்திலும் (கூப்பிடுவதே கஷ்டம்) கூப்பிட்டாலும் மேடையில் உட்கார வைத்தாலும் மாலையெல்லாம் போட மாட்டார்கள்.  நான் பத்திரப்படுத்த இரண்டாவது சந்தன மாலை கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன்.  படிகம் இலக்கியக் குழுவிற்கு என் நன்றி.  சந்தன மாலை மட்டுமல்லாமல் மூன்று கவிதைப் புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன.  லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய கேட்பவரே என்ற கவிதைத் தொகுதி கிடைத்தது.  320பக்கங்கள் கொண்ட தொகுதி இது. ரொம்ப நாட்களாக லக்ஷ்மி மணிவண்ணன் எழுதுவதை கவனித்து வருகிறேன்.  இத் தொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளையும் வாசித்து அது குறித்து எழுத வேண்டும்.  அதேபோல் கைலாஷ் சிவன் எழுதிய சூனியப்பிளவு என்ற கவிதைத் தொகுதி.  132 பக்கங்கள் கொண்ட தொகுப்பு.  இதையும் வாசிக்க வேண்டும்.  மூன்றாவது தொகுப்பாக ராஜன் ஆத்தியப்பன் எழுதிய கருவிகளின் ஞாயிறு என்ற தொகுப்பு.  80 பக்கம் கொண்ட தொகுப்பு இது.  இம் மூன்று புத்தகங்களையும் படித்து எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கவிதைப் புத்தகத்தைப் படிக்கும்போது அது கொடுக்கும் உத்வேகம் என்னையும கவிதை எழுதத் தூண்டும் என்று நினைக்கிறேன். 
நேற்று நடந்த கூட்டத்தில் நான் சற்று தாமதமாகத்தான் சென்றேன்.  என் நெடுநாளைய நண்பர் சண்முகம் பேசிக்கொண்டிருந்தபோது சென்றேன். அதனால் மற்றவர்கள் பேசியதைக் கேட்கவில்லை.  முக்கிய நிகழ்ச்சியாக கவிதை வாசிப்பு கூட்டம் நடந்தது.  எல்லோருடைய கவிதைகளையும் வாசிக்கக் கேட்டேன்.  கவிதையை வாசிக்கக் கேட்கும்போது கேட்பவர்களுக்கு என்ன மனநிலையை ஏற்படுத்தும்.  கவிதையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியுமா?  எல்லோரும் கவிதைகள் வாசிக்கும்போது அந் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.  எனக்கும் கவிதை வாசிக்க வேண்டுமென்று தோன்றியது.
ஒருவர் ஒரு கவிதையை வாசிக்கும்போது பார்வையாளர்கள் அக் கவிதையைக் குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உடனடியாக வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.  லக்ஷ்மி மணிவண்ணன் முதலில் கவிதை வாசித்தார்.  அவர் கவிதையை சத்தமாக அவர் வாசித்தபோது பார்வையாளர் மனநிலை அதை எப்படி உணர்ந்திருக்க முடியும் என்பது தெரியவில்லை. பொதுவாக ஒரு பார்வையாளன் பார்வையில் பல கவிதைகளை அவர் எழுதியிருப்பதாக தோன்றியது.  அவர் முதலில் வாசித்த ஒரு கவிதையில் முதல் ஐந்து வரிகளை அவர் படித்தபோது  என்னால் ரசிக்க முடியவில்லை.  இது என் ரசனையின் குறைபாடாக இருக்கலாம்.
ஒரு கவிதை கேட்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்க முடியுமா? முடியாது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.  

அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு

நான் இந்த மாதம் வரை 5 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  ஐந்தாவது புத்தகம் அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு.  232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.  கதைகளும் கட்டுரைகளும் கலந்த தொகுப்பு.  இத் தொகுப்பைப் படிப்பவருக்கு  தெரியும்.  அசோகமித்திரன் எதை கதையாக எழுதியிருக்கிறார், கட்டுரையாக எழுதியிருக்கிறார் என்று.  
ஒரு கூட்டத்தில் ஒரு எழுத்தாளர் அசோகமித்திரன் கதை ஒன்றைப் படித்துவிட்டு அது கதை அல்ல கட்டுரை என்று உரத்து சத்தம் போட்டு வாதம் செய்தார்.  அசோகமித்திரன் என்ன பதில் சொல்கிறார் என்றும் எதிர்பார்த்தார்.  உங்கள் பார்வையில் அப்படி பட்டால் நான் இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று குறிப்பிட்டார்.
அசோகமித்தரன் போன்ற படைப்பாளிக்கு எது கதையாக வருகிறது, எது கட்டுரைகயாக வருகிறது என்பது நன்றாகவே தெரியும்.  நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் கன்னிமேரா லைப்ரரியில் பழைய பத்திரிகைகளின் இதழ்களைப் பார்க்க நேரிட்டது.  அப்போது ஒரு பெண் எழுத்தாளரின் கதையைப் படித்தேன்.  என்னால் படிக்கவே முடியவில்லை.  ஆனால் அவர் பின்னால் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார்.  அதே அசோகமித்திரனின் பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கதையை இப்போது எடுத்துப் படிக்கும்போது, அதன் புதுத்தன்மை மெருகு குலையாமல் இருக்கும்.
கதையும் கட்டுரையும் கலந்த இந்தத் தொகுப்பு ஒரு அந்தர்கமானதொரு தொகுப்பு தான்.  இதில் முக்கியமாக இன்கிரிட் பெர்க்மன் சுயசரிதையைப் பற்றி எழுதியிருக்கிறார். கல்கியும் தேவனும் என்ற ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  
கல்கியின் நிழலிலேயே தேவன் இருந்து வந்தார்.  üகல்கிக்கும் தேவன் மாதிரி ஒருவர் ஆனந்தவிகடனை விட்டு விலகுவதில் பெரிய வருத்தம் இருக்காது. தனக்குக் கீழே உள்ளவன் நிறைய ஆற்றல் படைத்தவனாக இருந்தால் எந்த நேரம் தன்னையே கவிழ்த்து விடுவானோ என்ற அச்சம் பத்திரிகைத் துறையில் தவிர்க்க முடியாதது.  பின்னொரு காலத்தில் தேவனுக்கும் இதே பெயர் கிடைத்ததுý என்று அசோகமித்திரன் இப் புத்தகத்தின் 55வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
இப்படி படிக்க தூண்டுகிற கட்டுரைகளும் கதைகளும் கொண்ட தொகுப்புதான் இது  
கணவன். மகள். மகன் என்ற கதை எனக்குப் பிடித்த கதை.  எப்படி மனைவியை கணவன் அலட்சியப்படுத்துகிறான் என்பதையும், மகள் அம்மாவை எப்படி அலட்சியப்படுத்துகிறாள் என்பதையும், மகன் தான் குடிப்பதை அம்மாவிடம் ஏன் மறைக்கிறான் என்பதையும் விவரித்துக் கொண்டு போகிறார்.
ஒரு புத்தகத்தை எப்போதும் எடுத்து வாசிக்க வேண்டுமா , அந்தரங்கமானதொரு தொகுப்பு அப்படிப்பட்ட ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை.  விருட்சம் வெளியீடாக ஐந்தாவது புத்தகமாக இதைக் கொண்டு வந்துள்ளேன்.

வம்சி முதல் விருட்சம் வரை….

அழகியசிங்கர் 

நேற்று சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கி விட்டது.  இம் முறை தீவுத் திடலில்.  கிட்டத்தட்ட மாலை 4 மணிக்குத்தான் சென்றேன்.  புத்தகக் கட்டுகளை எடுத்துக்கொண்டு என் ஸ்டாலில் கொண்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டியிருந்தது.  ஏனென்றால் என் ஸ்டால் இருக்கும் வரிசை ரொம்ப நீளமானது. அதில் கடைசீ.
புத்தகம் வைக்க பெரிய மேஜைகளைத் தேட வேண்டியிருந்தது. ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக மிக நிதானமாகத்தான் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருந்தது.  எனக்கு உதவி செய்யும் கிருபானந்தன் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மடமடவென்று புத்தகங்கள் எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விட்டார்.  நாங்கள் இருந்த பக்கத்தில் காற்றே இல்லை.   ஒரு பேனிலிருந்து வரும் காற்றை நம்பி ப்ளாஸ்டிக் நாற்காலியை நகர்த்த வேண்டியிருந்தது.  பில்  போட சரியான மேஜை கிடைக்கவில்லை. குப்குப்பென்று வியர்த்தது.  என்னால் நிற்கவே முடியவில்லை.  உட்கார்ந்தே இருக்க வேண்டுமென்று தோன்றியது.  
நேற்று என்னை யாராவது பார்த்தால் பெரிய நோயில் அடிப்பட்டவன் போல் இருக்கிறான் என்று நினைத்துக்கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.  தீவுத்திடலில் பரவிய வெப்பத்தை முழுதாக உணர்ந்தேன்.  
என் வரிசையில் முதலில் வம்சி என்ற கடை இருந்தது.  எனக்கு ஆச்சரியம்.  அதைத் தாண்டி மெதுவாக நடந்து (என்னால் மெதுவாகத்தான் நடந்து வர முடியும்.  வேகமாக ஓட முடியாது) வரும்போது காலச்சுவடு கடை இருந்தது.  நமக்கு உறுதுணையாக இரண்டு கடைகள் என்று நினைத்தேன். 
இன்னும் தாண்டி வந்தேன்.  கிழக்கு கடையும் காட்சி அளித்தது.  சரிதான் நல்லதுதான் என்று நினைத்தேன்.  இன்னும் தள்ளி நடந்து வந்தேன்.  உயிர்மை கடை இருந்தது.  ஆச்சரியமாகி விட்டது.  இன்னும் தள்ளி நடந்தேன்.   சந்தியா பதிப்பகம் கடை இருந்தது.  ஒரே வரிசையிலா என்ற பிரமிப்பு என் மனதிலிருந்து ஓயவில்லை. புலம் என்ற கடையும கண்ணில் பட்டது. இன்னும் சந்று தூரத்தில் நிழல் பத்திரிகை ஆசிரியர் நடத்தும் முன்றில் கடை.
  அவ்வளவுதான் எல்லாம் இலக்கியச் சந்திப்பு நிகழ்த்தும் கடைகளாக இருந்தன.  இறுதியில் விருட்சம் கடை.  எல்லாக் கடைகளிலும் கூட்டங்கள் வரும்.  அந்தக் கூட்டங்களிலிருந்து ஒருசிலராவது விருட்சம் கடைக்கு வராமல் இருக்க மாட்டார்கள்.  நிழல் ஆசிரியர் திருநாவுக்கரரிடம் கேட்டேன். ஒரு சின்ன படம் எடுக்க ஐந்தாயிரம் போதுமா?  
‘டிசம்பர் மாதம் நடத்தும் வகுப்புக்கு வாருங்கள்.  எல்லாம் சொல்லித் தருகிறோம்,’ என்றார்.
இந்தப் புத்தகக் காட்சியில் வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை. கூவம் அருகில் ஓடுவதால், அதன் வாசனையை வர்ணிக்க விரும்பவில்லை. நான் ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்தேன்.  என்னால் நிற்கவே முடியவில்லை என்பதோடல்லாம்,  இன்னும் சிறிது நேரம் நின்றிருந்தால், தலைச் சுற்றி விழுந்து விடுவேன் போல் தோன்றியது.   வலு குறைவான நாற்காலியில் உட்கார்ந்தேன்.  கிருபாவிற்கும் எனக்கும் ஒரே வயது.  அவர் சாமாளித்துக் கொண்டு இருந்தார்.  அவருடைய உதவி பெரிய உதவி.  சனி ஞாயிறுகளில் காலையிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் கதி கலங்குகிறது.
அதனால்தான் கேட்கிறேன்.  யாராவது இளைஞர் கிடைப்பாரா?  ஒருவர் மட்டும் இருந்தால் போதும்.  ஒருசில மணி நேரம் சமாளித்தால் போதும்.  முழு நேரமும் வேண்டாம்.நன்கொடை அளிக்கப்படும். என்னை தொடர்பு கொள்ளுங்கள்.  9444113295.  ஸ்டால் எண் 594.