சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கவிதை வாசிக்கும் கூட்டம்.

அழகியசிங்கர்

04.09.2020 அன்று நடந்த இக் கூட்டம்  பாரதிக்கு இக் கூட்டம் அர்ப்பணம் செய்யப் படுகிறது. 

இக்கூட்டத்தில் பாரதி குறித்து சிறப்புரை ஆற்றியவர் வானவில் ரவி அவர்கள். அவருடைய அனல் பறக்கும் பேச்சைக் கேளுங்கள்.

இன்று ஆசிரியர் தினம்

அழகியசிங்கர்

நான் வணங்கும் ஆசிரியர்கள் என்று யாருமில்லை
நான் சந்தித்த ஆசிரியர்கள் உண்டு
ஒருவர் பொய் சொல்லியே பழக்கப்பட்டவர்
என் ஆசிரியராக இருந்தார்
குடும்பத்தில் நடப்பதை மாணவர்களிடம்
பகிர்ந்து கொள்ளும் அசட்டு ஆசிரியரும் உண்டு
மாணவர்களைக் கிண்டல் செய்தே
பழக்கப்பட்ட பெண் ஆசிரியரும் உண்டு
ஆனால்
அவர்களிடமிருந்து இதெல்லாம்
கற்றுக்கொள்ளக் கூடாதென்று கற்றுக்கொண்டேன்
கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன்தான்
நான் பார்க்கும் எல்லோரிடமும் எதாவது
கற்றுக்கொள்கிறேன்.
இன்னும் கூட…

எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி ஞாபகமாய்

ttps://www.youtube.com/watch?v=VhrAI1Fx1rk&t=833s

02.09.2020


அழகியசிங்கர்

    எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி கடைசியாக விருட்சம் சார்பில் ஜூலை 2019ல்  உரை நிகழ்த்தினார்.  வண்ணதாசன் கதைகள் குறித்து அவர் பேசினார்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நிகழ்த்திய அந்த உரைகளின் ஒளிப்பதிவுகளை இங்கே தருகிறேன்.

    பொதுவாக அவர் ஒரு பேச்சாளர் அல்லர்.  ஆனால் என்ன பேச வேண்டுமென்பதை எழுதி வாசித்துவிடுவார். அவர் நீண்ட நேரம் பேசிய நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்.

உலக கடித தினமாம்

துளிகள் 146


நவம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு நான் திடீரென்று அஞ்சல் அட்டைகளைத் தபால் நிலையத்தில் வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன்.
எழுதிய கடிதங்களை என்ன எழுதினேன் என்பதைக் கணினியில் அடித்து வைத்திருந்தேன்.
பலருக்கு எழுதியதால் அவர்களும் பதில் எழுதினார்கள். அதற்கெல்லாம் நான் பதில் கடிதங்கள் எழுதி அதைத் திரும்பவும் கணினியில் பதிவு செய்து, ஒருநாள் முழுவதும் இப்படிப் பொழுது போயிற்று.
என்னால் சமாளிக்க முடியவில்லை. பேசாமல் கடிதம் அனுப்புவதை நிறுத்தி விட்டேன். சிலர் என் அஞ்ச லட்டைக் கடிதங்களைப் பார்க்கிறார்களா என்பதே தெரியவில்லை. அவர்கள் யாரிடமிருந்தும் எந்தவிதப் பதிலும் வரவில்லை.
சிலர் தபால் அலுவலகத்தில் போய் அஞ்சலட்டை வாங்க முடியவில்லை என்பார்கள். அவர்களுக்கு நான் அஞ்சலட்டைகளைக் கொடுப்பேன். உடனே பதில் எழுதட்டுமென்று. ஆனால் அப்படியும் அவர்களிடமிருந்து பதில் வராது.
நான் எழுதும் இந்தக் கடிதங்களைத் தொகுத்துப் புத்தகமாகப் போடுமளவிற்குச் சேர்ந்து விட்டன.
சில கடிதங்களை இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
8.11.2017
கடிதம் 1
வியாழன்
சி லிங்குசாமி,
வணக்கம்.
28.02.2017 அன்று நீங்கள் அனுப்பியக் கடிதப்படி நாளை ‘சில கவிதைகள், சில கதைகள், சில கட்டுரைகள்’ புத்தகம் அனுப்பட்டுமா? நீங்கள் விபிபியில் வாங்கிக் கொள்வீர்களா?
கடிதம் : 2
,
அன்புள்ள சச்சிதானந்தம் அவர்களுக்கு,
வணக்கம்.
தயவுசெய்து தேனுகா புத்தகத்தைத் திருப்பித் தரவும். நான் தெரியாமல் உங்களிடம் புத்தகம் கொடுத்துவிட்டேன். மன்னிக்கவும். இது விஷயமாக நானும் நடராஜனும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம்.
கடிதம் : 8
அன்புள்ள நட்ராஜிற்கு, (சந்தியா பதிப்பகம்)
என்றும் 24
என் முப்பது ஆண்டு பதிப்பக அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டது, என்றும் 24. அதற்கும் கீழே அச்சடித்தால், அச்சு அடித்துக் கொடுப்பவருக்கு என்ன கிடைத்து விடப் போகிறது.
அதனால் என்றும் 24. புத்தகங்களை அச்சடித்து வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். விற்பனையாளர்களுக்குப் புத்தகங்களை விற்கக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே கொடுத்த புத்தகங்களைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள யோசித்துக் கொண்டிருக்கிறேன். தினமும் கார்டில் கடிதம் எýழுதி என் கையெழுத்தைச் சரிசெய்ய விரும்புகிறேன். நீங்கள் எதுவும் எழுதவேண்டாம். ஆனால் கார்டு கிடைத்தது என்று தகவல் கொடுத்தால் போதும். கடற்கரையிடம் மட்டும் இதுமாதிரி நான் எழுதும் கார்டைக் காட்டாதீர்கள். யாராவது நான் எழுதும் இக் கடிதத்தைப் படித்துச் சிரித்தால் மொபெல் தொலைப்பேசியில் படம் பிடித்து அனுப்புங்கள்.
29.01.2018
கடிதம் எண் : 32
அன்புள்ள டாக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு,
வணக்கம். என் கதைகளைப் படித்துப் பாராட்டியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் ஒருவர் புத்தகம் வாங்குவதே கடினம். பின் அதை எடுத்துப் படிப்பது இன்னும் கடினம். படிப்பது மட்டுமல்லாமல் அப் புத்தகம் எழுதியவரை தொலைப்பேசியில் கூப்பிட்டுப் பாராட்டுவது இன்னும் இன்னும் கடினம். இதையெல்லாம் மீறிச் செயல்பட்ட உங்களுக்கு என் நன்றி.
மேலும் என் புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவித்தால் அவர்கள் வேறு கதைகளைச் சொல்லி என் கதைகளைப் பற்றிய உங்கள் உயர்வான அபிப்பிராயத்தைக் கெடுத்து விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
நான் கதைகளை எப்படி எழுதினேனோ நீங்கள் அதன் தன்மையைப் புரிந்துகொண்டு பாராட்டியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் கூட்டம் நடத்துவதாக உள்ளேன். கட்டாயம் நீங்கள் கலந்துகொண்டு பேச வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுமாதிரி 112 பக்கங்கள் வரை கடிதங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு புத்தகமாகக் கொண்டு வர யோசனை செய்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் கடிதங்கள் யாருக்கும் அனுப்புவதில்லை. ஏன் என்று தெரியவில்லை?

அஞ்சலட்டைக் கதைகள் 22

அழகியசிங்கர்

இது என் 22வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு மேல் முடிந்து விட்டது.

எல்லாம் சரி

    இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு என்று தெரியாமலிருந்தேன்.  சமீப காலத்தில் அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.  ஏன்?

    நானும் அவளும் ஒரே கல்லூரியில் படித்தாலும் எனக்கு முன்னாலேயே அவளுக்கு வேலை கிடைத்து விட்டது.  அதன்பின்தான் எனக்கும் கிடைத்தது.  நானும் அவளும் கல்லூரி காலத்திலிருந்து ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்.  இருவரும் மேற்கு மாம்பலத்தில் பக்கத்துப் பக்கத்துத் தெருவிலே குடியிருக்கிறோம்.

    இரண்டுபேர் குடும்பமும் சாதாரண குடும்பம்.  வாடகை வீடுகளில்தான் வாசம். கடந்த சில மாதங்களாக அவள் என்னுடன் பழகும்போது அலட்சியம் காட்டுவதுபோல் தோன்றுகிறது.  இதை நேரிடையாக அவளிடம் போட்டு உடைத்து விடலாம்.  ஆனால் அதெல்லாம் சரி வராது. 

    நான் இந்த விஷயத்தில் அவளுடைய உரிமையை முக்கியமாகக் கருதுகிறேன்.  ஒருவர் யாருடன் பேச வேண்டும் யாருடன் பேசக் கூடாது என்பதெல்லாம் அவரவர் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.

    இந்தத் தருணத்தில்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்தியா வந்து இரண்டு மூன்று மாதங்கள் வந்திருந்து தங்குவதாகச் செய்தி வந்தது.

    நான் உடனே அவர்களுடைய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, கிருஷ்ணமூர்த்தியைச் சந்திப்பதற்கு வாய்ப்புத் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

    அவர்கள் ஒருநாள் வந்து சந்திக்கலாமென்று அனுமதி அளித்தார்கள்.  எனக்கு அவளுடைய பிரச்சினைதான் முக்கியமாகத் தோன்றியது.  இதற்கு எதுமாதிரியான தீர்வு என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவரைப் பார்த்து இதைப் பற்றிப் பேச வேண்டுமென்று யோசித்தேன்.  கிருஷ்ணமூர்த்தியிடம் இதைப்பற்றியெல்லாம் பேசினால் சிரிக்கத்தான் சிரிப்பார்.

    நான் கேலிக்கு ஆளாவேன் என்றெல்லாம் தோன்றியது.  இந்தத் தருணத்தில் அவளைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

    ஒரு முறை போன் செய்தபோது, அவள் சொன்னாள் :” வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.  பார்க்க முடிவில்லை,” என்று.

    அந்தப் பதில் எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.  அதை நினைத்துப் பல நாட்கள் நான் யோசனை செய்தபடி இருந்தேன்.  வீட்டில்
அம்மா கூடச் சொன்னாள் : நீ முன்பு மாதிரி கலகலப்பாக இல்லை என்று.

    கிருஷ்ணமூர்த்தியைச் சந்திக்க வேண்டிய நாள் வந்து விட்டது.  அன்று அலுவலகம் போகவில்லை.  சரியாக மதியம் 12 மணிக்கு அவரைச் சந்திக்க நேரம் கொடுத்திருந்தார்கள்.    

    அவர்கள் அலுவலகத்திற்குப் போய் நான் வந்து விட்டதை அறிவித்தேன். அவர்கள் சில நிமிடங்கள் காத்திருக்கும்படி சொன்னார்கள்.

    எப்போதுமே எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி தங்கியிருக்குமிடம் பிடிக்கும்.  அடர்ந்த மரங்களும் செடிகளுக்கு நடுவில் அவர் தங்கியிருக்கும் வீடு இருக்கும்.  மரப்படிக்கட்டுகள் வழியாக மாடிக்குப் போனால் அவர் அறை இருக்கும். 

    அங்கு அவரைப் போய்ச் சந்தித்தேன்.  உட்காரச் சொன்னார். அவர் என்னையே உற்றுப் பார்த்தார்.  என்ன கேட்க வேண்டுமென்பதுபோல் அந்தப் பார்வை இருந்தது.  அவர் மௌனமாகவே இருந்தார். 

    ஒரு நிமிடம் நான் அவரைக் கூர்ந்து கவனித்தேன்.  என்னை அவர் தலையிலிருந்து கீழ் வரை தீர்க்கமாகப் பார்ப்பது போல் தோன்றியது.  உடனே என் மனம் அமைதியாகிவிட்டது. 

    கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தோம்.  பின் நீங்கள் போகலாமென்பதுபோல் தலை ஆட்டினார்.  ஒருக்ஷணம் உலகமே புரிய ஆரம்பித்தது.  வெளியே வந்து விட்டேன்.

    அதன் பின் நான் அவளைப் பார்க்கவே இல்லை.


சூம் மூலமாக 14வது கவிதைக் கூட்டமாக பத்து வரி கவிதை வாசிக்கும் கூட்டம் – நகுலன் 100வது பிறந்தநாள் நினைவாக

    அழகியசிங்கர்

    இது 14வது கவிதை வாசிக்கும் கூட்டம்.  வரும் வெள்ளியன்று  – 28.08.2020 நடக்க உள்ளது.

    புதுமையாக இந்த முறை 10வரிகள் கொண்ட கவிதைகளாகக் கவிதை வாசிப்பதை ஏற்பாடு செய்துள்ளேன்.  பெங்களூர் இலக்கிய நண்பர் கிருஷ்ணசாமி நகுலன் குறித்து அறிமுகம் செய்தபின் நகுலனின் சில கவிதைகளையும் வாசிப்பார்.

    கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு கவிஞர்.  சிறுகதை ஆசிரியர். கல்லூரியில் தமிழ் பயில்வுக்கும் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இதில் பலரும் கலந்து கொண்டு கவிதை வாசிக்க வேண்டும். 

    ஒருவருக்கு ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும்.  நிதானமாக இரண்டு முறை கவிதையைத் தெளிவாக உச்சரிக்க வேண்டும்.  பத்து வரி கவிதைக்குத் தலைப்பு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.

    எந்த விதத்தில் ஒரு கவிதையை பத்து வரிக்குள் கொண்டு வர முடியுமென்பதைப் பார்க்கலாம்.

    இதில் யாரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்கலாம்.  எந்த நிபந்தனையும் இல்லை. 

    வாசிக்கப்படும் சிறந்த கவிதைகளை நவீன விருட்சம் இதழில் வெளியிட விருப்பம்.

    இதோ சூம் குறித்து விபரம் கொடுக்கிறேன்.

Time: Aug 28, 2020 07:00 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87484234690?pwd=dmdQa0xCenlBN3NaSE9nQmlta0tDUT09
Meeting ID: 874 8423 4690Passcode: 065953

விருட்சம் கவிதை வாசிப்பு சூம் மூலம் 14வது கூட்டம் (நகுலன் 100வது பிறந்த நாள் முன்னிட்டு)


அழகியசிங்கர்

    14வது கூட்டமாக வர வெள்ளிக்கிழமை விருட்சம் கவியரங்கம் கூட்டம் நடத்தப் போகிறேன்.  இக்கூட்டத்தை எழுத்தாளர் நகுலனுக்குச் சமர்ப்பிக்கப் போகிறோம். பெங்களூர் கிருஷ்ணசாமி நகுலனை நினைவு கூர்ந்து நகுலனின் கவிதைகள் சிலவற்றைப் படிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

    கவியரங்கக் கூட்டத்தை ஒவ்வொரு விதமாய் நடத்த விருப்பம்.  எப்போதுமே கவிதை என்பது உயிருள்ளதாக இருக்க வேண்டும்.  வாசிப்பதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.

    கிட்டத்தட்ட 66 கவிஞர்கள் கவிதைகள் வாசித்துள்ளார்கள்.  ஒவ்வொரு முறையும் இதை மாற்றி மாற்றி எதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.

    நம்முடைய பெரும்பாலான கவி அரங்கத்தில் டாபிக் கொடுத்து கவிதை எழுதச் சொல்கிறார்கள்.  அல்லது ஒரு மணி நேரம் முன்னதாக கவிதைத் தயாரித்து வாசிக்கச் சொல்வார்கள்.

    இதெல்லாம் கவிதைகளாக வருவதை விட வீர வசனமாகத்தான் எனக்குப் படுகிறது.

    தலைப்பில்லாமல் கவிதை எழுதுவதில் ஒரு குழப்பம் ஏற்படாமலிருப்பதில்லை.  அந்தக் கவிதையைக் குறிப்பிட வேண்டுமென்றால் எப்படிக் குறிப்பிடுவது?

    இந்த முறை கவிதையை வாசிக்க ஒரு அளவுகோல் வைத்திருக்கிறேன்.  அதாவது பத்து வரிகளில் கவிதை எழுதிக் கொண்டு வரவேண்டும். 9 வரிகளோ 11 வரிகளோ இருக்கக் கூடாது.  முன்பே கவிதை எழுதியிருந்தாலும் அதையும் படிக்கலாம். புதிதாக எழுதி வாசிக்கலாம்.

    நேரிடையாக சூம் கூட்டத்தில் வந்திருந்து கவிதை வாசிக்கப் பெயர் கொடுக்கலாம்.  ஒருவர் ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும்.

    கூட்டம் ஒன்றரை மணி நேரத்தில் முடித்து விடலாமென்று நினைக்கிறேன்.  உதாரணமாக என்னுடைய பத்து வரி கவிதையை இங்கு தர நினைக்கிறேன்.

        புகை மண்டலம்

        இத்தனை நாட்கள்

        ஏதோவொன்று
        ஏதோவொன்று
        ஏதோவொன்று
        ஏதோவொன்று
        ஏதோவொன்று
        ஏதோவொன்று
        ஏதோவொன்று
        ஏதோவொன்று

        சொல்லாமலே……..






சூம் மூலமாக 21.08.2020ம் அன்று விருட்சம் நடத்தும்13வது கவிதை வாசிக்கும் கூட்டம் (ந.பிச்சமூர்த்தி கவியரங்கக் கூட்டம்)

அழகியசிங்கர்

எல்லோருக்கும் வணக்கம்.  இது 13வது கவிதை வாசிக்கும் கூட்டம்.  போன வெள்ளிக்கிழமை 12வது கூட்டம் பூனைகளைப் பற்றி வாசிக்கும் கூட்டமாக இருந்தது.  25பேர்களுக்கு மேல் கவிதைகள் வாசித்தார்கள்.  கூட்டம் நிறைவாக இருந்தது.


இதுவரை 60 கவிஞர்கள் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் வாசித்திருக்கிறார்கள்.  21.08.2020 அன்றும் 6 கவிஞர்கள் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள்.  6 பேர்கள் கருத்துரை வழங்குகிறார்கள்.  இந்த மாதம் 15ஆம் தேதிதான் ந. பிச்சமூர்த்தி பிறந்தார்.  புதுக்கவிதையின் பிதாமகர் அவர்.  அவரை ஞாபகப்படுத்தும் விதமாக இந்தக் கவியரங்கத்தின் பெயரை ந.பிச்சமூர்த்தி கவியரங்கக் கூட்டம் என்று பெயர் சூட்டலாமென்று நினைக்கிறேன்.


வரும் வெள்ளியன்று கவிதை வாசிப்பவர்கள் பட்டியலை இங்குத் தருகிறேன்.


1. கே.ஜெயந்தி 2. எம்.ராமச்சந்திரன் 3. விஜய கல்யாணி 4. எஸ்.வி. வேணுகோபாலன் 5. கவி செல்வா 6. கலக்கல் கந்தசாமி.

கருத்துரை வழங்குபவர்கள் 


1. மன்னை ஜீவிதா அரசி 2. ராய செல்லப்பா 3. அன்புச் செல்வி 4. ஆர்.கே 5. நாகேந்திர பாரதி 6. கபிலன் 


இந்தக் கூட்டத்திற்கு மேற்பார்வையாளர் வ.வே.சு.
கூட்டம் சரியாக ஒன்றரை மணி நேரம் நடக்கும்.  ந.பிச்சமூர்த்தியைப் பற்றி குறிப்புகள் வழங்குபவர் அழகியசிங்கர். பிச்சமூர்த்தி கவிதைகளை வாசிப்பவர் அழகியசிங்கர், மையம் ராஜகோபாலன்.  

Time: Aug 21, 2020 07:00 PM India
Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87629115758
Meeting ID: 876 2911 5758No Password

இன்று பூனைகளைப் பற்றிய கவிதைகளை வாசித்துக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர் 

இன்று மாலை 7 மணிக்கு சூமில் பூனைகளைப் பற்றிய கவிதைகளை வாசிக்கப் பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்களை முன்னதாகவே 15 நிமிடங்கள் முன்னால் சூமில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.


தங்களுடைய கவிதைகளை வாசிப்பது மட்டுமல்லாமல் நம் முன்னோடிகள் கவிதைகளும் வாசிக்கலாம்.  எல்லோரும் ஒரே ஒரு கவிதையை மட்டும் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


பூனைகள் கவிதைகளைச் சேகரித்து இலவசமாகக் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்து விநியோகிக்க எண்ணம். இப்படிச் சொல்வதால் பூனைக்கு நான் செய்யும் துரோகமாகவும் இருக்கலாம்.
இன்று படிக்கும் கவிதைகளை என் இ மெயிலில் அனுப்புங்கள்.navina.virutcham @ gmail. com

 Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89819929866Meeting ID: 898 1992 9866No passwordUS02WEB.ZOOM.USJoin our Cloud HD Video Meeting

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கூட்டம் – பூனையைக் குறித்து கவிதை வாசித்தல்

 
பூனையைக் குறித்து நாளை கவிதை வாசிக்க உள்ளோம். மாலை 7 மணிக்கு. முதலில் பாரதியார் கவிதையை வாசிக்க உள்ளேன். அதே போல் இன்னும் சில கவிஞர்களின் கவிதைகளையும் வாசிக்க உள்ளேன். நான் எழுதிய பூனைகளைப் பற்றி கவிதையும் வாசிக்க உள்ளேன். ஒவ்வொருவரும் ஒரு கவிதை மட்டும்தான் வாசிக்க வேண்டும். இந்தக் கூட்டம் சரியாக 1மணி 15 நிமிடங்களுக்குள் முடிப்பதாக உள்ளேன். இந்த இணைப்பை உங்களுக்குத் தருகிறேன்.

Meeting on Friday Evening at 7 pm.

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89819929866

Meeting ID: 898 1992 9866 No password