அழகியசிங்கர்
20.022016 அன்று எஸ்.எம்.ஏ.ராம் கூட்டம் ஒன்று விருட்சம் சார்பில் நடத்தினோம். நானும், நண்பர் கோவிந்தராஜனும். அவருடைய நாடகங்களைக் குறித்து. அதன் ஒலி பரப்பை இங்கு தருகிறேன்.
அழகியசிங்கர்
20.022016 அன்று எஸ்.எம்.ஏ.ராம் கூட்டம் ஒன்று விருட்சம் சார்பில் நடத்தினோம். நானும், நண்பர் கோவிந்தராஜனும். அவருடைய நாடகங்களைக் குறித்து. அதன் ஒலி பரப்பை இங்கு தருகிறேன்.
அழகியசிங்கர்
எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன்.
ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம்
அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
அவர் நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு நாவலும் கூட. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்.
‘தாத்தா காலத்து பீரோ’ என்ற அவருடைய சிறுகதைப் புத்தகம் வெளிவந்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது. அப்போது புத்தகக் காட்சி நடந்து கொண்டிருந்த சமயம்.2017 ஆம் ஆண்டு.
கொண்டு வந்து தருகிறேன் என்று கூறினார். அவருக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்று தெரியும். போதி வனம் வெளியிட்ட புத்தகத்தைப் புத்தகக் காட்சியில் வாங்கிக்கொண்டேன்.
ராம் அபுத்திரனின் கதை நாடகத்தைப் புத்தகமாகக் கொண்டு வர நினைத்தார். என்னிடம் அதைச் சொன்னபோது நான் அதற்கு ஏற்பாடு செய்து உதவினேன்.
திருவல்லிக்கேணியில் அந்த பிரஸ் இருந்தது. அவர் புத்தகத்தைச் சரியாக அச்சடித்துக் கொடுக்கவில்லை. ராமிற்கு பிரஸ்காரன் மீது படு கோபம். உடனே அவன் மீது கேஸ் போட்டார். கேஸ் முடிவு யாருக்குச் சாதகமாக வந்தது என்று தெரியவில்லை. அந்த அளவிற்குப் போராட்ட குணம் கொண்டவர் ராம்.
அதன்பின் எஸ.எம்.ஏ ராம் நாடகங்கள் என்ற பெயரில் அவரே ஒரு தொகுப்பைத் திரும்பவும் சில வருடங்கள் கழித்துக் கொண்டு வந்தார் . இந்த முறை அவரே புத்தகம் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டு விட்டார். அந்தப் புத்தகத்திற்கான ஒரு அறிமுகக் கூட்டத்தை விருட்சம் மூலம் ஏற்பாடு செய்து நடத்தினோம்.
இன்னொரு முறை நான் அவரை அடையாரிலுள்ள மலர் மருத்துவ மனையில் சந்தித்தேன். நான் என் பெண்ணிற்காகவும், அவர் அவருடைய பெண்ணிற்காகவும்.
ராமிற்கு வாசகர் வட்டம் அதிகம். அவருடைய நாடகப் புத்தகங்களைப் பலர் வாங்கினார்கள். பல ஊர்களில் அவர் நாடகங்களை அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய அங்கீகாரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இலக்கியத் தரமான நாடகங்கள் எழுதும் ஒருவருக்கு இந்த அளவிற்கு அங்கீகாரம் கிடைப்பது பெரிய விஷயம். . உண்மையில் வெளி ரங்கராஜனுக்கும் அவர் வளர்ச்சியில் பங்கு இருப்பதாக நினைக்கிறேன்.
விருட்சம் கூட்டத்தில் நாடகத்தைப் பற்றி ராம் பேசிய ஆடியோவை ஒலி பரப்ப உள்ளேன்.
திடீரென்று அவர் மறைந்த செய்தியை அறிந்தபோது வருத்தம். அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
2You and Bhaskaran Jayaraman
விருட்சம் 45வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.04.2021 அன்று சனிக் கிழமை கவிதை உரையாடல்
அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 45வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 03.04.2021 அன்று நடைபெற உள்ளது. இந்த முறை கவிதையைக் குறித்து உரையாடல் நடைபெற உள்ளது.
எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 45வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிTime: Apr 3, 2021 06:30 PM IndiaJoin Zoom
Meetinghttps://us02web.zoom.us/j/89241279559…
Meeting ID: 892 4127 9559
Passcode: 248645
44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 27.03.2021 அன்று வெள்ளிக்விழûமை – மொழிப்பெயர்ப்புக் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு.
அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 27.03.2021 சிறப்பாக நடந்து முடிந்தது.
துளி – 180
அழகியசிங்கர்
என் விஷயத்தில் இப்படித்தான் நடந்து விட்டது. நவீன விருட்சம் 115-116 இதழ் 106 பக்கங்கள். அதன் எடை 136 கிராம்.
வந்தது வம்பு. ஒரு இதழை ஒருவருக்கு அனுப்ப ரூ.9 ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்.
நான் சமீபத்தில் பத்திரிகை அனுப்புவதற்கு இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியதை மாற்றி நாலு ரூபாய் ஸ்டாம்ப் வைத்து அனுப்பிக் கொண்டிருந்தேன். அதுவும் 100 கிராமிற்குள் இருந்ததால். சனிக்கிழமை தபால் அலுவலகத்தில் உள்ள அதிகாரி போனில் கூப்பிட்டுப் பேசினார். “உங்கள் பத்திரிகை அனுப்புவதற்கு ரூ.9க்கு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டு”மென்றார். பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார்.
இந்தப் புத்தகத்தின் எடை100 கிராமிற்குள் இருந்திருந்தால் ரூ.4 தபால் தலை ஒட்டியிருக்கலாம். இன்னும் சில பக்கங்களைக் குறைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் தயாரிப்பு விலையையும் குறைத்திருக்கலாம்.
விளம்பரமில்லாமல் ஒரு பத்திரிகையைக் கொண்டு வரும்போது கட்டாயம் 100 கிராமிற்குள் பக்கங்கள் குறைவாகத்தான் திட்டமிட வேண்டும்.
116 பக்கங்கள் உள்ள புத்தகமாகக் கொண்டு வந்தால் கட்டாயம் 125 ரூபாய்க்குப் புத்தகம் விலை வைத்திருக்க வேண்டும். நான் இதன் விலையை ரூ.50க்கு மேல் உயர்த்தவில்லை.
அதனால்தான் சுமை கால் பணம் என்றால்…சுமை கூலி முக்கால் பணம் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அட்டையில்லாமல் விருட்சம் அம்மணப் பத்திரிகையாக வந்து கொண்டிருந்தது. திரும்பவும் அந்த நிலைக்கே போக வேண்டும் போலிருக்கிறது. தெளிவாக இன்னும் முடிவு எடுக்க முடியவில்லை.
தி.ஜானகிராமனின் பாயசம்
அழகியசிங்கர்
‘பாயசம்’ என்ற கதையைப் படித்தேன். சாமநாது என்பவரின் மன வக்கிரம்தான் இந்தக் கதை. சிறப்பாக எழுதி உள்ளார் தி.ஜானகிராமன்.
ஆரம்பிக்கும்போதே தி.ஜானகிராமன் இப்படிக் குறிப்பிடுகிறார்.
‘சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.’
இதையெல்லாம் செய்துகொண்டு வரும் தன் மனதில் வக்கிரத்தை வளர்த்துக்கொண்டு வருகிறார்.
தன் அண்ணன் பையன் சுப்பராயன் பேரில் அவருக்கு அவ்வளவு ஆத்திரம். இந்தக் கதை முழுவதும் அதை வெளிப்படுத்துவதுதான்.
சாமநாது தன்னையும் தன் அண்ணன் பையன் சுப்பராயனையும் ஒப்பிட்டு மனத்திற்குள்ளே நடத்துகிற நாடகம்தான் இந்தக் கதை.
யாரோ சொல்வதுபோல் மனசாட்சி குரலாக ஒலிக்கிறது.
உதாரணமாக, ‘நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா? சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட் ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு?’ என்று யாரோ சொல்வதுபோல் சாமநாதுவின் மனக்குரல்ஒலிக்கிறது
சாமநாதுவுக்கு எழுபத்தேழு வயது, சுப்பராயனுக்கு ஐம்பத்தாறு வயதுதான்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாமுநாது சுப்பராயன் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார். உதாரணமாக நாதஸ்வரம் சத்திரத்திலிருந்து தொடங்குகிறது. தெருவிலிருந்து தவில் சத்தம் தொடங்குகிறது. பத்தரை மணிக்குமேல் தான் முகூர்த்தம். மணி எட்டு கூட ஆகவில்லை. ‘சும்மா தட்டுகிறார்கள். அவனுக்குப் பொழுது போக வேண்டும்.’ இதை நினைத்துக்கொண்டு வரும்போது ஏன் சாமிநாதுவுக்கு சுப்பராயன் ஞாபகம் வரவேண்டும்?
தவில் தட்டுபவனுக்குப் பொழுது போகவேண்டும். சுப்பராயனுக்கும் பொழுது போக வேண்டும். சுப்பராயன் பொழுதுபோகாமல்தானே ஏழு பெண்களையும், நாலு பிள்ளைகளைப் பெற்றான் என்ற ரீதியில் சாமுநாது யோசிக்கிறார்.
அவருக்கு சுப்பராயனைப் பற்றி யோசிக்க யோசிக்கப் புத்தி பேதலித்துப் போனதுபோல் தோன்றுகிறது. புதுப்பாலத்தில் போகிற வருபவர்களைப் பார்க்கும்போது சுப்பராயன் மாதிரி தெரிகிறது.
சுப்பராயன் அந்த ஊருக்காக எல்லாம் செய்கிறான். பரோபகாரி. ஊருக்குள் கரும்புப் பயிரைக் கொண்டு வந்தான். எதிரே அக்கரையில் நாலு இடத்தில் புகை, வெல்ல ஆலைப் புகை- எல்லாம் சுப்பராயன்.
அதோ பள்ளிக்கூடம் – சுப்பராயன்தான் கொண்டு வந்தான்.பாலத்துக்கு ஓரமாக கோவாப்பரட்டி – சுப்பராயன்தான் கொண்டு வந்தான். சுப்பராயன் மூலம் ஊரே மாற்றமடைகிறது. ஏனோ இதற்கெல்லாம் பெருமைப்பட வேண்டிய சாமிநாது ஆத்திரப்படுகிறார்.
ஏழெட்டு வருஷம் முன் இறந்து போன அவர் மனைவி வாலாம்பாள் குரல் கேட்கிறது.
“சுப்பராயனைப் படிக்க வைக்க உங்களாலேயும் உங்க அண்ணாலேயும் மாசம் நாலு ரூபாய் அனுப்ப முடிந்ததா,” என்கிறாள் வாலாம்பாள்.
படிப்பின் கடைசி வருஷத்தில்‘போரும் படிக்கதுன்னு’ சுப்பராயனை அழைத்துக்கொண்டு வந்து விடுகிறார் சாமநாது.
படிக்க வைக்க முடியாத சுப்பராயன். ஊருக்கு வந்தான். ஓடிப்போனான். கோட்டையில் கடையில் உட்கார்ந்து கணக்கு எழுதினான். அங்கே சண்டை. கடை வாடிக்கையாளர் ஒருவரிடமே கடன் வாங்கி பாதிப்பங்கு லாபத்திற்கு அதே மாதிரி மளிகைக்கடை வைத்தான். கடை வைத்தவுடன் மளமளவென்று முன்னுக்கு வந்துவிட்டான் சுப்பராயன் இருபது வருடத்திற்கு முன்னால் இருபது லட்சம் சொத்து சேர்த்து விட்டான். உள்ளூரிலேயே கால் பங்கு நிலம் வாங்கி விட்டான்.
அதையே பாகம் பண்ணி சாமநாதுவுக்கு பாதி கொடுத்தான். அதிலும் திருப்தி இல்லை சாமநாதுவுக்கு. அவர் பங்கு ஊருக்குச் சற்று எட்டாக் கையில் விழுந்தது என்று. அது மட்டுமல்ல ஆற்றுப் படுக்கைக்கும் சற்று எட்டாக்கை. சண்டை. அப்போதுதான். வாலாம்பாள் சொன்னாள்.
“ஒண்டியா நின்னு மன்றாடி சம்பாதிச்சதை, பாவம் சித்தப்பான்னு கொடுக்கிறான்” என்று கிண்டல் செய்கிறாள். இந்த இடத்தில் சாமநாது மனைவியைப் பார்த்து துடுக்காகப் பேசுகிறார்.
“அவனுக்கு பரிஞ்சுண்டு கூத்தாடறதைப் பார்த்தா, நீ என் அம்படையாளா, எங்க அண்ணா ஆம்படையானான்னே புரியலை,” என்கிறார்.
வாலாம்பாள் ‘தூ’ என்று துப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள். மூன்று நாள் அவளோடு பேசவில்லை.
குளித்துவிட்டு வருகிறார்.
“சித்தப்பா, எங்கே போயிட்டேள்?” என்கிறான் சுப்பராயன். ஜானகிராமன் இந்த இடத்தில் ஒரு வரி எழுதியிருக்கிறார். ‘கிராமமே கலியாண பெண்போல் ஜோடித்துக்கொண்டிருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.
“சித்தப்பா, எங்கே போய்ட்டேள்?”
மாலை மாற்றுகிறார்கள் – பெண்ணும் பிள்ளையும். சாமநாதுவிற்கு மூச்சு முட்டிற்று. மெதுவாக நகர்ந்தார். வியர்வை சுடுகிறது. ற்றுக்காகக் கொல்லைப்பக்கம் நடந்தார். கோட்டையடுப்புக்கு இப்பால் மேடைமீது ஒரு பாரி ஜோட்டுத் தவலை. இடுப்பளவு – மேல் வயறளவு உயரம் பாயசம் மணக்கிறது. திராட்சையும் முந்திரியுமாக மிதக்கிறது. ஐந்நூறு அறுநூறு பேர் குடிக்கிற பாயசம். இந்த இடத்தில் விபரீதமான புத்தி தோன்றுகிறது
சாமநாதுவுக்கு. அவர் ஒருத்தரே கவிழ்த்து விடுவதாக நினைக்கிறார். அதுவும் சாத்தியம்தான். சாமநாது இரண்டு கைகளையும் கொடுத்து மூச்சை அடக்கி, மேல்பக்கத்தைச் சாய்த்தார், ப்பூ – இவ்வளவுதானே. அடுத்த நொடி, வயறளவு ஜோட்டி, மானம் பார்க்கிற வாயை, பக்கவாட்டில் சாய்த்துப் படுத்து விட்டது. பாயசம் சாக்கடையில் ஓடிற்று. கொட்டிவிட்டு பெரிதாகச் சத்தம் போடுகிறார். தன் பயத்தை மறைக்க.
“இத்தனை பெரிய எலியைப்பாயசத்திலெ நீஞ்சவிட்டுவிட்டு இத்தனை பாயசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள் – கிராதகன்களா”. என்றெல்லாம் சத்தம் போடுகிறார்.
“எப்படிப்பா இத்தணாம் பெரிய ஜோட்டியை சாச்சேள்” என்கிறாள்.அவர் பெண்.
பெண்ணை துரத்தி விடுகிறார் அங்கிருந்து.
கதை முடியும்போது வாலாம்பாள் பாடுகிற மாதிரியிருக்கிறது.
இந்தக் கதையைப் படித்து முடித்தபின் எனக்கு இந்தக் கதையே ஞாபகமாக வந்தது. சாமநாது மாதிரி நம்மிடம் பலர் நடமாடிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.
“நாமும் வேற வேற விதமா சாமநாதுவா!” அற்புதமாய் கொண்டு போய் முடித்திருக்கிறார் தி. ஜானகிராமன்.
ஒவ்வொருவரும் அவர்களுக்குள்ளே உள்ள சாமநாதுவை வெளியே விரட்ட வேண்டும். இப்படிச் சிந்திக்க வைத்த கதையை எழுதிய தி.ஜானகிராமன் வாழ்க.
இலக்கியத் தரமான கதை இப்படித்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். யோசிக்க யோசிக்க இந்தக் கதை நம்மை குடைந்து கொண்டிருக்க வேண்டும். கடைசி வரை நம்மால் இதை மறக்க முடியாது ஏனென்றால் நாம் இன்னும் சாமநாதுவாக இருக்கும் வரை.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 மார்ச் 2021 திண்ணையில் வெளிவந்தது)
அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 27.03.2021 அன்று நடைபெற உள்ளது.
இந்த முறை மொழிபெயர்ப்புக கவிதைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன். தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. இது மாதிரியான கவிதைகளை வாசிப்பது நம்முடைய கவிதை பற்றிய அறிவை மேன்மைப் படுத்தும். எல்லோரையும் அழைக்கிறேன். புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம்.
Topic: Time: Mar 27, 2021 06:30 PM IndiaJoin Zoom Meeting விருட்சம் நடத்தும் 44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிhttps://us02web.zoom.us/j/85119514056…Meeting ID: 851 1951 4056
Passcode: 505746US02WEB.ZOOM.USJoin our Cloud HD Video Meeting
அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 43வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 20..03.2021 அன்று நடை பெற்றது. கவிதை வாசிப்பவர்கள் மற்ற கவிஞர்களின் கவிதைகளை வாசித்தார்கள். வித்தியாசமான கூட்டமாக இருந்தது.
அழகியசிங்கர்
எண்பதுகளில் முக்கியமான எழுத்தாளர் சுப்ரமண்யராஜுகிட்டத்தட்ட 100 கதைகள் எழுதியிருப்பார்.
இன்னும் பிரசுரமாக வேண்டிய கதைகள் இருப்பதாக இலக்கிய நண்பர் ஒருவர் சொல்கிறார். சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்று கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் 32 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு குறுநாவல்கள். பொதுவாக எல்லாக் கதைகளையும் கச்சிதமாக ஆரம்பித்து கதைகளைச் சுலபமாக முடிக்கிறார் சுப்ரமண்யராஜு.
அதில் நான் எடுத்துக்கொண்டு எழுத உள்ள கதை ‘நாளை வரும்’ என்ற கதை. அம்மா வீட்டிற்கு ஊருக்குப் போக விரும்புகிறாள் சுமதி. அம்மாவைப் பார்க்க சுமதியின் அக்காவும் சில நாட்கள் தங்க அந்த ஊருக்கு வருகிறாள். அக்காவைச் சந்திக்காமல் விட்டால் சந்திப்பது 2 மூன்று வருடம் ஆகிவிடும். ஊருக்குக் கிளம்புவதற்கு முன் முதல் நாள் தூக்கம் வராமல் படுத்துக்கொண்டிருக்கிறாள் சுமதி. கணவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
கண்ணை மூடி அரைத் தூக்கத்திலிருந்தபோது ஏதோ சத்தம் கேட்க விழித்துக் கொள்கிறாள். நேரம் பார்க்கிறாள். மணி பத்து நாற்பது. அவள் கணவன் தியாகராஜன் வரவில்லை. இரவில் இவ்வளவு நேரம் ஏன் ஆகிறது என்று நினைத்துக்கொண்டு எழுந்து சன்னல் வழியாகப் பார்க்கிறாள். காம்பவுண்ட் கேட் அருகில் தியாகராஜன் கார் நிற்பதைப் பார்த்துத் திகைக்கிறாள். அன்றுதான் அவள் வீட்டில் ஒரு புகைப்படம் கிடைக்கிறது. அந்தப் புகைப்படத்திற்குப் பின் பக்கம் நிர்மலா என்று கையெழுத்திட்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு நெருடல் சந்தேகமாக மாறி அந்த சந்தேகம் உறுதி ஆகிவிடுகிறது.
அவர்கள் வீட்டு அவுட் ஹவுஸில் நிர்மலா ஆரம்பத்தில் அம்மாவுடன் குடிவந்தவள். அவள் அம்மா இறந்து போக அவள் அங்கயே தனியாகத் தங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் மவுண்ட் ரோடில் ஒரு கம்பெனியில் பணிபுரிகிறாள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் தொடர்பு. இது திருமணத்திற்கு முன்னாலிருந்து நடக்கிறது. இந்தக் கள்ளத் தொடர்பை அறிந்து பொங்குகிறாள் சுமதி.
அதுவும் அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போகும்போது உறுதியாகத் தெரிகிறது. ஆனால் கணவனிடம் நேரிடையாகக் கேட்கத் தயக்கமாக இருக்கிறது. இது நல்ல சந்தர்ப்பம் இல்லை என்றும் நினைக்கிறாள்.
அம்மா வீட்டிற்குப் போய் அங்கயே தங்கி விடலாமென்று யோசனை செய்கிறாள். ஊரில் வீட்டு வாசலில் சுமதி வரவிற்காகக் காத்திருக்கிறாள் இவள் அக்கா. அக்காவுடன் பேசத் தொடங்குகிறாள் தங்கை. “ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு லெட்டர்ல எழுதியிருந்தியே, அதைச் சொல்லு முதல்லே,” என்கிறாள் தங்கை. “எதைச் சொல்றது? நான் ஓடா உழைச்சு எறும்பா தேஞ்ச கதையையா,” என்கிறாள் அக்கா.
அவள் வீட்டில் ஒரு வேலைக்காரி மாதிரி எல்லோருக்கும் உழைப்பதை வருத்தத்துடன் சொல்கிறாள் அக்கா. அதனால் அங்கே போகப் பிடிக்கவில்லை அவளுக்கு. “உன் வீட்டில் உன் கிட்டே உன் வீட்டுக்காரர் எப்படி நடந்துக்கறார்” என்ற கேள்வியைக் கேட்கிறாள் சுமதி, அக்காவைப் பார்த்து. “அவரைப் பற்றி எந்தக் குற்றமும் சொல்ல முடியாது,” என்கிறாள். “அவருக்கு எதாவது கெட்ட வழக்கம் உண்டா? அவருக்காக உன் மற்ற கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக்க முடியாதா?” “அதுக்காக நாள் பூராவும் இப்படி அவஸ்தைப் பட வேணுமா?” என்கிறாள் அக்கா. தங்கை சொல்கிறாள் : “நாளைக்கே நீ ஊருக்குப் புறப்படு. எந்தக் கெட்ட வழக்கமும் இல்லாத கணவன் கிடைக்கிறதுதான் முக்கியம்.”
நிர்மலாவின் போட்டோவைக் காட்டுகிறாள் சுமதி. அவளுக்கும் அவள் கணவனுக்கும் இருக்கிற கள்ளத் தொடர்பைக் கூறுகிறாள். மவுண்ட்ரோடில் உள்ள தாம்சன் கம்பெனியில் அவள் வேலை பாக்கிறதையும் சொன்னாள் சுமதி.
இதைக் கேட்டவுடன் மறுநாள் அக்கா ஊருக்குக் கிளம்பினாள். ரயில் ஏறும்போது அக்கா தங்கைக்காகக் கடவுளைத் தினமும் வேண்டிக்கொள்ளப் போவதாக அக்கா சொன்னாள். அவள் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் வீட்டைத் திட்டியபடி இருந்தவள் உடனே கிளம்பிப் போய்விட்டாளே என்று. சுமதி அவள் வீட்டிற்குப் போகவில்லை. அவள் கணவனிடமிருந்து இரண்டு மூன்று கடிதங்கள் வந்து விட்டன.
ஒருநாள் ஊருக்குப் போவது என்று தீர்மானித்தாள். ஊரிலிருந்து வந்தபிறகும் கணவனைப் பார்க்கும்போது அவள் கோபம் நீங்கவில்லை. பொதுவாக அதிகம் பேசாதவன் அவளைப் பார்த்து அதிகம் பேசினான். இளநீர் வாங்கிக் கொடுத்தான். மனைவியைச் சமாதானப் படுத்தினான்.
இந்த இடத்தில் அவள் கோபத்தை அவனிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அவனும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. கதாசிரியர் இந்த இடத்தைப் பூடகமாக விட்டுவிடுகிறார். காரசாரமாகச் சண்டையை ஏற்படுத்தவில்லை.
அடுத்தநாள் சுமதிக்கு ஒரு ஆச்சரியம். அவுட்ஹவுஸ் காலியாக இருந்தது. தோட்டக்காரர் வேலுவை கேட்கிறாள். வேலு சொல்கிறான். அந்தப் பெண்ணிற்கு பேங்களூருக்கு வேலை மாற்றம் கிடைத்துவிட்டது. வீட்டை காலிசெய்து நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது என்கிறான்.
இரண்டு நாள் கழித்து அக்காவிடமிருந்து கடிதம். நிர்மலாவின் மாற்றலுக்குச் சுமதியின் அக்காவின் கணவர்தான் தெரிய வருகிறது. அவள் பணிபுரியும் தாம்ஸன் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் அவள் அக்காவின் நெருங்கிய நண்பர். அக்கா கணவர் சொல்லி மாற்றல் நடக்கிறது. இறுதி வரிகளில் வேலு சொல்கிறான்.
“தோட்டத்துல ரெண்டு மூணு நாளா பூப்பறிக்காமல் நிறையச் சேர்ந்து போச்சும்மா,” என்கிறான். “மாலை கட்டி சாமிக்குப் பேடறீங்களா?” என்று கேட்கிறான்.
“எல்லாப் பூக்களையும் பறி” என்கிறாள் இந்தக் கதையில் கணவன் மனைவிக்குள் உள்ள உறவு ரொம்ப முக்கியமானது. கணவனின் நடத்தை அவளுக்குப் புரிந்தாலும், .உடனே அவனிடம் அவள் பற்றித் தெரிவிக்காமல் ஒரு கோபத்தை மௌனமாக வெளிப்படுத்துகிறாள்.
அவளுக்கு ஏன் கோபம் என்பது அவனுக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு இடத்தில் இந்தக் கதையை முற்றுப் புள்ளி வைத்தாலும், அவளுடைய சந்தேகம் அவனிடத்தில் எப்போதும் இருக்கும். எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதை அவனிடத்தில் தெரியப்படுத்தினாலும் தெரியப்படுத்துவாள்
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 21 மார்ச் 2021 திண்ணையில் வெளிவந்த கட்டுரை )
அழகியசிங்கர்
வணக்கம்.
இது ஏழாவது கூட்டம். 19.03.2021 (வெள்ளிக்கிழமை) சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் குறித்து ஏழாவது கூட்டம். 15 பேர்கள் கதைகளை வாசித்தார்கள். அதன் ஒளிப்பதிவைக் கேட்டு மகிழுங்கள்.