48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021

48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று சனிக்கிழûமை 6.30 மணிக்கு இனிதாக நடந்து முடிந்தது.
அழகியசிங்கர் கலந்துகொண்டவர்கள் மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசித்தார்கள். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்குப் பெருமை படுகிறேன்.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பத்தாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

லா.ச.ரா குறித்து பத்தாவது கதை வாசிக்கும் கூட்டம் 23.04.2021 அன்று நடந்தது.  15 பேர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.  அதன் ஒளிப்பதிவை இங்கே பகிர்கிறேன்.   

22.04.2021
துளி – 189


இன்று உலகப் புத்தகத் தினம்


அழகியசிங்கர்


இன்று உலகப் புத்தகத் தினம். நான் தினமும் 2 சிறுகதைகள் சில கவிதைகள் வாசிப்பது வழக்கம்.


உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு லாசராவின் கதைகளை எல்லாம் வாசிக்கலாமென்று நினைக்கிறேன்.


உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு.


ரஸவாதி கதைகள் என்ற தொகுப்பு. 447 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 37 கதைகள் உள்ளன. விலை ரூ.400.


உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி சலுகை விலையாக ரூ.350க்கு இந்தப் புத்தகம் கிடைக்கும்.

தபால் செலவு இலவசம். இந்த மாதம் முழுவதும் இந்தச் சலுகை.
பிரதி வேண்டுபவர்

கீழ்காணும் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துவிட்டு முகவரியை அனுப்பவும். NAVINA VIRUTCHAM OD Account NUMBER 462584636, IDIB000A031 INDIAN BANK, Ashoknagar Branch

48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று சனிக்கிழமைûமை 6.30 மணிக்கு

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 48வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 24.04.2021 நடைபெற உள்ளது. 


நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.  தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.


அதுமாதிரியான கவிதைகளை வாசிப்பது நம்முடைய கவிதை பற்றிய அறிவை மேன்மைப் படுத்தும்.  எல்லோரையும் அழைக்கிறேன்.


புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம்.  அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு.  

.

ஜெயமோகனின் பிறந்ததினம் இன்று

துளி – 188

அழகியசிங்கர்

லக்ஷ்மி மணிவண்ணன் முகநூலில் பதிவு செய்ததைப் படித்தேன். இன்று ஜெயமோகன் பிறந்தநாள். அவருக்கு என் வாழ்த்துகள்.

தமிழ் எழுத்தாளர்களிடையே வித்தியாசமானவர் ஜெயமோகன். விஷ்ணுபுரம் என்ற அமைப்பின் மூலம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கௌரவித்துப் பரிசு கொடுக்கிறார். இதை விளம்பரப்படுத்துவதற்காக அவர் செய்வதில்லை.

ஒரு முறை தேவதச்சனுக்குப் பரிசளிக்கும் விழாவிற்குப் போயிருந்தேன். எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதை நேரில் கண்டு கொண்டேன்.

சதா எழுத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பவர். அவர் மகாபாரதத் தொடரை எழுதிக்கொண்டிருந்தபோது அவர் பெயரிட்டு ஒரு கவிதை எழுதினேன். கவிதையின் தலைப்பு: ஜெயமோகன்.

ஜெயமோகன்

ஆயிரக்கணக்கான பக்கங்களில்

மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார்

படிக்கப் படிக்க வளர்ந்துகொண்டே போகிறது

எது மாதிரியான எழுத்தாளர் இவர்

எப்படியெல்லாமோ யோசனை செய்கிறார்

என்பது ஆச்சரியம்தான்

எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா

ஆனால்

என்ன செய்வது

அவர் எழுதும் வேகத்திற்கு

என்னால் படிக்க முடியவில்லையே…….

ந.பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழா நிறைவு நாளில் (22.08.2001) கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் ஜெயமோகன். ௨௦௦௦ ஆண்டிலிருந்து ஓராண்டு நாங்கள் ந.பிச்சமூர்த்திக்கு விழா நடத்தினோம். இந்த நிகழ்ச்சி இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

2You and Rangarajan Sridhar

ஒரு கதை ஒரு கருத்து

 
பி.எஸ் ராமையாவின் ‘மலரும் மணமும்’


அழகியசிங்கர்


நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி. இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார்.


சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா கதைஞன். அவரை போன்ற மேதைப் படைப்பாளிகள்தான் எதிர்கால இலக்கியத்துக்குத் தேவை.
ராமையாவின் கதையான ‘மலரும் மணமும்’ கதையைப் படித்துப்பார்த்தேன். சி சு செல்லப்பா அப்படிக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.
பொதுவாக ஒரு கதையைப் படிக்கும்போது நாம் கதையைப் படிக்கிறோம் என்ற நினைப்பு நமக்கு வரக்கூடாது என்று நினைப்பவன் நான்.
இந்தக் கதையைப் படிக்கும்போது அதுமாதிரியான எண்ணம் நமக்கு ஏற்படாமலிருக்காது.
கதையில் நாலைந்து பாத்திரங்கள்தான். சானுப்பாட்டி, செல்லம், ராமதாஸ், ராமதாஸ் அப்பா.
செல்லம் அவளுடைய மாமா பையன் ராமதாஸ் மீது அளவு கடந்த பிரியம்.
‘கடைசி கட்டி மாம்பழம் யாருக்கு?’ என்று கேட்கிறாள் சானுப்பாட்டி.
எனக்கில்லை பாட்டி, ராமதாசுக்குத்தான். அவன் தானே குட்டி யானைபோலே இருக்கணும். அவனுக்குத்தான் கடைசிப் பிடி என்பாள் செல்லம்.


நல்லதெல்லாம் ராமதாஸ்÷க்குத்தான் சேரவேண்டுமென்பாள் செல்லம். சானுப்பட்டிக்கு அந்தக் குழந்தையின் தியாகத்தை எண்ணி அதிசயமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுவாள்.


ராமதாஸ் சந்தோஷமாகச் சிரித்தால் செல்லமும் சிரிப்பாள். அவன் அழுதால் அவளும் அழுவாள். செல்லத்துக்கு ஏழு வயதாயிருக்கும் பொழுதே அவள் தன்னுடைய தாய் மாமனான லக்ஷ்மணய்யர் வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளை அநாதையாக அவள் தாயும் தந்தையும் விட்டுவிட்டு சென்று விட்டனர்.


சானுபாட்டி குழந்தைகளின் அன்னியோன்யத்தையும், ஒருவர் விஷயத்தில் மற்றவர் காட்டிய அக்கரையையும் அன்பையும் காணும்பொழுதெல்லாம் அவ்விருவரும் புருஷனும் மனைவியுமாக எவ்வளவு அழகாகக் குடும்பம் நடத்துவார்கள் என்று எண்ணுகிறாள்.
ராமதாஸ் அப்பா லக்ஷ்மணய்யருக்கு வேறு விதமான திட்டம். அந்தக் குழந்தைகளின் சினேகத்தின் வலிமையை நன்றாக அறிந்திருந்தார். செல்லம் ஒரு அநாதை. ஒரு செல்லாக் காசுகூட வைக்காமல் லக்ஷ்மணய்யர் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள்.
ஆகையால் செல்லத்தை வேற எங்காவது கல்யாணம் செய்து விட வேண்டுமென்று நினைக்கிறார். ராமதாஸ்÷ற்கு நல்ல பணக்கார வீட்டுப் பெண்ணாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்.அவனுக்காக வாங்கும் வரதட்சிணையில் செல்லத்தின் கல்யாணத்திற்காகச் செய்யும் செலவையும் வசூலித்து விடலாமென்று நினைக்கிறார்.
செல்லத்துக்கு ஒன்பது வயது ஆகிக்கொண்டிருந்தது. அவர்களிருந்த கிராமத்திற்கு நாலைந்து மைல் தூரத்திலிருந்த வேறொரு கிராமத்தில் புரோகிதம் செய்து கொண்டிருந்த ஒருவருக்கு அவளை இரண்டாந் தாரமாக கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
சாணுப்பாட்டி அதைக் கேள்விப்பட்டவுடன் நிரம்பவும் வருத்தமடைந்தாள். பாட்டியின் பேச்சை பிள்ளை கேட்கமாட்டான். என்ன கொடுமை இது.


செல்லத்துக்கு அதன் அர்த்தமே தெரியாத ஒரு கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. இருவருக்கும் புரியவில்லை. அவர்கள் வழக்கம்போல ஒருவர் தலைமயிரை இன்னொருவர் பிடித்திழுப்பதும் ஆடுவதும் பாடுவதுமாக விளையாடிக்கொண்டே கல்யாண வைபவங்களில் கலந்து கொண்டார்கள்.


ராமதாஸ் இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது செல்லம் ருதுவான செய்தியும், அதன் பிறகு ஒரு வாரத்திற்கெல்லாம் அவள் விதவையான செய்தியும் வந்தன.
செல்லத்துக்கு தான் வைதவ்யமடைந்த விஷயம் துன்பப்பட வேண்டிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவளுக்குக் குழந்தை உள்ளம்.


ராமதாஸ் பி.ஏ படிக்க ஆரம்பித்தவுடன் வக்ஷ்மணய்யர் கல்யாணச் சந்தையில் தமது சரக்குக்கு எவ்வளவு கிராக்கியிருக்கிறதென்ற விஷயமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். கடைசியாக ஒருபெண் பிடித்திருந்தது. வரதட்சிணையாக ரொக்கமாக நாலாயிரம் ரூபாய் கொடுக்கப் பெண் வீட்டார் தயாராகவிருந்தனர். ராமதாûஸ உடனே புறப்பட்டு வரும்படி அவர் தந்தை கடிதம் எழுதினார்.


இந்த முறை அவன் செல்லத்தைப் பார்க்கும்போது அவனுக்குத் திகைப்பாகப் போய்விடுகிறது. அவளை நினைத்து ஏங்க ஆரம்பித்தான். அத்தகைய அழகி தன்னுடைய உடைமைப் பொருளாகவிருக்க வேண்டியது போய், அவள் இந்த உலகத்தில் பயனற்ற ஒரு பொருளாகி விட்டாளென்று எண்ணியவுடன் அவனுடைய நெஞ்சம் பட்டபாட்டை வர்ணிப்பது இயலாத காரியம்.


ராமதாஸ் செல்லத்தையைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான். செல்லத்தைத் தனியாகச் சந்தித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறான். அந்தப் பேச்சின் பலாபலன்களைப் பற்றி அவர்கள் அப்பொழுது ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவுமில்லை. ஆனால் அதுல ராமதாஸ÷க்கு விருப்பமிருந்தால் செல்லத்துக்கும் அது விருப்பம்தான். இதை செல்லம் அவனிடம் தெரியப்படுத்துகிறாள்.


இந்தக் கதையை ராமையா அத்தியாயம் அத்தியாயமாக எழுதி உள்ளார். சென்னையில் சட்டப்படிப்பு படிக்கச்செல்லும்போது ராமதாஸ் ஒரு வருடம் கழித்துத் திரும்ப வீட்டிற்கு வருகிறான்.


ஒருநாள் இருவரும் தனியாக வீட்டிலிருந்தனர். அப்பொழுது தற்செயலாக நேர்ந்த ஒரு சம்பவத்தால் ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ள நேர்ந்தது. உடனே இருவருடைய உள்ளத்திலும் விவரிக்கவியலாத ஒரு உணர்ச்சியெழுந்தது என்று ராமையா எழுதியிருக்கிறார்.


பின், இன்னொரு இடத்தில், செல்லம் நான் பட்டணம் போகப் போகிறேன். இந்த வருஷம் எப்படியாவது அப்பாவிடம் சொல்லி நம் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்கிறான். இதைக் கேட்ட செல்லத்தின் கண்கள் ஏமாற்றத்தால் மழுங்கின. அவற்றினின்றும் இரு கண்ணீர்த் துளிகள் முத்துக்களெனக் கீழே உதிர்ந்தன.


இந்த இடத்தில் ராமையா ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஹிந்து சமூகத்தில் வைதவ்யமடைந்த ஒரு பெண் சிற்றின்ப நினைவுகளில் மனதைச் செலுத்த விடாதபடி செய்யச் சில கட்டுப்பாடுகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில் ராமதாஸ் நினைத்துக் கொண்டிருக்கும் செல்லத்திற்கு எப்படி இருக்கும்? அவன் திருமணம் செய்துகொள்வானா மாட்டானா என்ற ஏக்கம் இருந்திருக்கும்.
ராமதாஸால் அப்பா இருக்கும்வரை தான் செல்லத்தைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்ல தைரியம் வரவில்லை.


திடீரென்று ஒருநாள் லக்ஷ்மணய்யர் மரணம் அடைந்து விடுகிறார்.அதேபோல் சானுப்பாட்டியும் மரணப்படுக்கையில் இருக்கும்போது ராமதாûஸப் பார்த்து, ‘அடே ராமு, குழந்தை செல்லம், தாயார் தகப்பனாரற்ற அநாதையடா.. அவளுடைய கதிதான் ரொம்ப அநியாயமாய்ப் போய்விட்டது..உன்னைத் தவிர அவளுக்கு வேறே யாருமில்லேடா..அவளைக் கைவிட்டுடாதேயடா என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.


படிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தன் கல்யாணம் விஷயமாகச் செல்லத்தைப் பார்க்கிறான். அவனுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. செல்லம் முற்றிலும் உருமாறிப்போயிருந்தாள்.


அவளிடம் தன் விவாகத்தைப் பற்றிப் பேசினான். அதைக் கேட்டு செல்லத்திற்கு எந்த உற்சாகமுமில்லை. அவன் விரும்பினால் அந்த விவாகம் நடைபெறுவதில் அவளுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை என்று சொல்லி விட்டாள்.


அடுத்த மாதமே அவளைத் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தான்.
திருமணம் செய்துகொண்ட பின்பு, ஆவலுடன் அவளைக் கட்டித் தழுவுகிறான். அவளுக்கு எந்த ஈர்ப்பும் இல்லாமலிருக்கிறாள். என்ன செல்லம் இந்தக் கல்யாணத்தில் உனக்குச் சந்தோஷமில்லையா என்று வினவுகிறான்.


அதைக்கேட்டு செல்லம் நிரம்பவும் சிரமத்துடன் புன்னகை செய்து, “உன்னுடைய திருப்திக்கும் சந்தோஷத்திற்கும்தான் நான் இதற்குச் சம்மதித்தேன். இந்த ஜன்மம் முழுவதும் உனக்குப் பணிவிடை செய்யலாமென்ற திருப்தியைத் தவிர எனக்கு இதில் வேறு சந்தோஷமே இல்லை” என்கிறாள்.


முதலில் ராமதாஸ் மீது ஆர்வமாக இருந்த செல்லம், ஏன் இப்படி மாறினாள்? திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய ராமதாஸ், அப்பாவிடம் பேசப் பயந்ததால், அவளுக்கு அவனைப் பற்றிய ஆசை மறத்து விட்டது.
கடைசியில் இப்படி எழுதுகிறார் ராமையா.


அவளது மெல்லிய சரீரம் அவனது அரவணைப்பில் துவண்டு விழுந்தது. அடுத்த வினாடி ராமதாஸ்; தனது கரங்களில் மணமற்ற மலரே தங்கியிருந்ததென்பதை உணர்ந்தாள் என்று முடித்திருக்கிறார்.


எனக்குத் தெரிந்து என்குடும்பத்தில் உறவினர் ஒருவர் இதுமாதிரி சின்ன வயதில் விதவை ஆகிவிட்டார். அவருக்கு மொட்டை அடித்து ஒதுக்கி வைத்துவிட்டார்கள். அவருக்குப் பைத்தியம் பிடித்து சில மாதங்கள் அவதிப்பட்டார்.


இந்த நிலை செல்லத்துக்கு வரவில்லை என்றாலும்,இந்தக் கதையை இப்போது நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது கேள்விக்குறி. நான் ரசித்த கதையில் இதுவும் ஒன்று.
ராமையாவைப்பற்றி பெருமையாக சி.சு.செல்லப்பா கூறிய கருத்துடன் இக் கட்டுரையை முடிக்கிறேன்.


தினமணி கதிர் வாரப்பதிப்பில் வாரம் ஒரு கதை வீதம் ஒரு வருஷ காலத்துக்கு மேல் சிறுகதைகள் விடாமல் தொடர்ந்து எழுதிய தனிப்பெருமை ராமையாவுக்குத்தான் உண்டு. ரசமான கதைகள் எழுதுவதில் அவருக்கு இணை யாருமே இல்லை.வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் நிலைகளைக் கொண்டு கதை புனையும் அவரது ஆற்றல் தலை சிறந்தது என்கிறார் சி சு செல்லப்பா.


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணை- 18 ஏப்ரல் 2021)

சூம் மூலமாக 47வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்

17.04.2021 அன்று சனிக்கிழமை 6.30 மணிக்கு இனிதாக நடைபெற்றது.   அதன் ஒளிப்பதிவு இங்குத் தரப்படுகிறது.


கலந்து கொண்டு கவிதை வாசித்தவர்களுக்கு நன்றி.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பத்தாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி


அழகியசிங்கர்

இதுவரை ஒன்பது கதை வாசிக்கும் கூட்டம் நடந்து விட்டது.  இப்போது நடைபெற உள்ள கூட்டம் பத்தாவது கூட்டம்.  லா.ச.ரா கதைகளைத் தேர்ந்தெடுத்து கூட்டம் நடத்த உள்ளேன். கதைகளை வாசித்து 15 நண்பர்கள் கதைகளைக் குறித்துப் பேசுகிறார்கள்.


வரும் வெள்ளிக்கிழமை (23.04.2021) மாலை 6.30 மணிக்குக் கூட்டம் நடைபெற உள்ளது.  அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பத்தாவது கதை வாசிக்கும் நிகழ்ச்சி

Time: Apr 23, 2021 06:30 PM IndiaJoin Zoom Meeting

https://us02web.zoom.us/j/82144546544…

Meeting ID: 821 4454 6544

Passcode: 469795

நீல பத்மநாபனின் நகுலம் என்ற நீள் கவிதை

துளி – 187

அழகியசிங்கர்

நகுலனின் நீண்ட கால நண்பர் நீல பத்மநாபன்.  அவருடைய நீள் கவிதை நகுலம். 
இந்தப் புத்தகம் விருட்சம் வெளியீடாக வந்துள்ளது.  கடந்த ஆண்டு விருட்சம் வெளியீடாக இரண்டு நூல்கள்தான் சொண்டு வர முடிந்தது.  


ஒரு புத்தகம் துளிகள் 2 என்ற புத்தகமும் இரண்டாவது புத்தகம் ஒரு கதை ஒரு கருத்து தொகுதி 1 என்ற புத்தகமும். இதைத் தவிர 4 இதழ்கள் விருட்சமும்.  


ஆனால் 2021 ஆம் ஆண்டு எந்தப் புத்தகமும் இதுவரை கொண்டு வந்ததில்லை. 
சில புத்தகங்கள் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ளன. தற்போது நீல பத்மநாபனின் நகுலம் என்ற நீள் கவிதைப் புத்தகம் வெளிவந்துள்ளது.


இப்புத்தகம் நீல பத்மநாபன் மேற் பார்வையில் திருவனந்தபுரத்தில் உருவானது. இப்புத்தகத்தில் இன்னொரு விசேஷம் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கட்டுரைகள்  வெளியிடப்பட்டிருக்கின்றன.


கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நீல பத்மநாபனின் கவிதைத் தொகுதிகள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன.  


நகுலம் என்ற நீள் கவிதை அதன்  தொடர்ச்சியாக முத்திரை பதித்துள்ளது.   முழு நீள வாழ்க்கை வரலாற்றில் நகுலன் ஏறத்தாழ 60 ஆண்டுகள் நீல பத்மநாபனுடன் நெருங்கிப் பழகி இருக்கிறார்.  உண்மையில் தன் நட்பின் ஆழத்தை நகுலம் என்ற பெயரில் ஒரு நீள் கவிதை 


நீள் கவிதை மட்டுமல்ல இந்தப் புத்தகத்தில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன.  கவிஞர் ஷண்முக சுப்பையாவைப் பற்றி ஒரு உரையாடல் நகுலனும் நீலபத்தமநாபனும் நிகழ்த்தியது இதில் வெளிவந்திருக்கிறது.  


152 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் விலை : ரூ.150.
இப் புத்தகத்தின் பிரதி விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப் பேசி  எண் : 9444113205.


விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்,  7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033.      

ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை

 பத்திரிகைகள் பலவிதம்….



அழகியசிங்கர்

‘ புதிய புத்தகம் பேசுது’ என்ற ஏப்ரல் மாத இதழ் என் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டுத் திரும்பவும் படிக்கலாம் என்று வைத்துவிடுவேன்.
ஆனால் இந்த முறை முழுவதும் படித்தேன். இது ஒரு அருப்புக்கோட்டை சிறப்பு இதழ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆசிரியர் முத்துகுமாரியுடன் ஒரு பேட்டி. இவர் ஒரு ஆசிரியை. பாடம் நடத்தும்போது குழந்தைகளிடம் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறுவதாகப் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் பேட்டியில் எனக்கு இதுதான் முக்கியமாகத் தோன்றுகிறது. வாசிப்பின் வாசல் திறப்பவர்கள் என்று தலைப்பில் இந்தப் பேட்டி வெளிவந்திருக்கிறது.


அடுத்தது இலக்கணக் கண்கள் காணாத சித்திரங்கள். நக்கீரன் கோபால் பற்றிய கட்டுரை. இதை எழுதியவர் ச.மாடசாமி. கோபால் என் வகுப்பறை மாணவர் அல்லர் மற்றொரு வகுப்பûயின் மாணவர் என்கிறார். கோபாலைப் பற்றி பற்பல நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இந்தக் கட்டுரையில்.


புதிய புத்தகம் பேசுதுவின் ஆசிரியர் ஆயிஷா இரா நடராஜன்.அவர் 15 புத்தகங்களைப் பற்றி விவரித்திருக்கிறார். சரியாக ஒரு பாரா ஒரு புத்தகத்திற்கு வீதம். இந்த முறையில் புத்தகங்களை அறிமுகப்படுத்தியது சிறப்பாக உள்ளது.


‘வலை வாசல் வருக’ என்ற புத்தகத்தைப் பற்றிக் கூறும்போது. வியப்போடு நமக்குச் சற்று வியர்க்கவும் செய்கிறது என்கிறார். முனைவர் பா.சிதம்பர ராஜன், க.சண்முகம் எழுதிய கணினி இயல் குறித்து தமிழ்ப் புத்தகம்.


‘இலக்கணம் இனிது’ என்ற நா.முத்து நிலவன் புத்தகம். தமிழ் பேசும், எழுதும் நல்லுலகிற்கு மிகவும் தேவையான பங்களிப்பு இந்த நூல்.
மூன்றாவது புத்தகமாகக் ‘கண்ணில் தெரியும் கடவுள்’ என்ற ஹைக்கூ கவிதைகள் பற்றிய புத்தகத்தைப் பற்றி எழுதி உள்ளார். இந்த புத்தகம் ஒரு பல மிக அசலான ஹைச்கூ கவிதைகளை உள்ளடக்கியது.
உதய்சங்கரின் ‘பொம்மைகளின் நகரம்’ சிறார் புத்தகம். குழந்தைகளிடையே கற்பனைத் திறனை வளர்க்கும் சூப்பர் சித்திரம் என்கிறார்.
‘இந்திய சுதந்திர8ப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்’ என்ற இந்தப் புத்தகத்தை ஜெ.ராஜா முகமது எழுதி உள்ளார். ஆயிஷா இந்தப் புத்தகம் பற்றிக் குறிப்பிடும்போது இந்த நூலை வாசித்தபோது பல பக்கங்களைத் திருப்ப முடியாமல் நான் கண்ணீர் கசிந்தேன் என்று குறிப்பிடுகிறார்.”
எஸ்.சங்கரநாராயணன் சிறுகதைத் தொகுப்பான ‘நன்றி ஓ ஹென்றி’ புத்தகத்தை நேர்த்தியான தொகுப்பு என்கிறார்.
அறிவியல் புனைவுகளை எழுதுவது கவிஞர் புவியரசு எனும் ஆளுமைக்குப் புதிதல்ல என்கிறார் ஆயிஷா.
‘நண்பர்கள் பார்வையில் எங்கெல்ஸ்’ என்ற மொழிபெயர்ப்பு புத்தகம். மொழி பெயர்த்தவர் சு. சுப்பராவ். இந்த நூல் ஒரு ஆவணம்.
‘காராபூந்தி சிறார் கதைகள்’ விழியன் எழுதியது. மின்னல்கள் எனச் சிறார் கதை ஆக்கிய விதத்தை வியக்கிறேன் என்கிறார் ஆயிஷா.


‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற கி.வீரமணி புத்தகம். வேறு எந்த தமிழறிஞரையும் விடத் தமிழுக்கு அதிக பங்களிப்பைச் செலுத்தியவர் தந்தை பெரியார் என்பதை ஆழமாக நிறுவும் அற்புத படைப்பு இந்த நூல் என்கிறர் ஆயிஷா.
என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டு விட்டு என்ற தகாஷி நாகாய் புத்தகம் மொழி பெயர்த்தவர் கு.ம ஜெயசீலன் கல்வி, குழந்தை வளர்ப்பு, அதில் அரசின் பொறுப்பு என்று எல்லாவற்றையும் கிழிக்கும் கசப்பு மருந்து இந்த நூல்.


‘101 கேள்விகளும் 100 பதில்களும்’ என்ற புத்தகத்தைத் தினகரன் எழுதியிருக்கிறார். அரிய தகவல்கள் இந்த நூஙூல் கொட்டிக் கிடக்கின்றன என்கிறார் ஆயிஷா.
‘நீல மரமும் தங்க இறக்கைகளும்’ என்ற சரிதா ஜோவின் முதல் சிறார் கதை. சிறார் இலக்கிய படைப்பாளிகளில் பெண்கள் குறைவு. அதிலும் ஒரு ஆசிரியை என்கிறார்.
‘அப்பாவின் நாற்காலி’ என்ற கவிதைப் புத்தகம். வளவ துரையன் எழுதிய கவிதைகள். பல கவிதைகள் மிகவும் எளியவை என்கிறார் ஆயிஷா


‘உரக்கப் பேசு’ என்கிற சுதன்வா தேஷ்பாண்டே யின் மொழிபெயர்ப்பு நூல் மொழி பெயர்த்தவர் அ மங்கை. இன்றைய பாசிச அரசியல் சூழலில் உரக்கப் பேசப்பட வேண்டிய படைப்பு என்று முடிக்கிறார் ஆயிஷா.


இந்தப் பத்திரிகையில் ஆயிஷாவின் 15 புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது.


வாசிப்பு ரசனை வாழ்க்கை என்ற தலைப்பில் எஸ்.வி வேணுகோபாலன் ஒரு தொடர் கதையை எழுதிக்கொண்டு வருகிறார்.ஆர் சூடாமணி எழுதிய நெருப்பு என்ற கதையை எடுத்து அலசுகிறார்.


நேர்காணலில் சிந்து வெளி ஆய்வாளராகவும் இந்திய ஆட்சிப் பணியாளராகவும் பரவலாக அறியப்படுபவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இடம் பெறுகிறார். நேர்காணல் செய்தவர் சங்கர சரவணன். நீண்ட இந்த நேர்காணல் சிறப்பாக உள்ளது. பல அரிய தகவல்களைக் கொண்டது.
‘கடலோடிகளின் கண்ணீர்க் கறைகள்’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் மணியன் அவர்கள் வறீதையா கான்ஸ்தந்தின் புத்தகமான ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ என்ற நூலினை அறிமுகப்படுத்துகிறார். இந்தப் புத்தகம் கடலோர மீனவர்கள் வாழ்வு, அவர்களின் தொழில் முறை குறித்து விரிவாகக் கூறுகிறது.


சிதம்பரம் இரவிச்சந்திரனின் ‘வீட்டிலிருந்து காட்டிற்கு’ என்ற சுற்றுச் சூழல் தொடர் ஒன்றும் வந்துள்ளது.


‘கொமறு காரியம்’ என்ற கீரனூர் ஜாகிர்ராஜா சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ஸ்ரீநிவாஸ் பிரபு விமர்சனம் செய்துள்ளார். உடனே இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆவல் உண்டாகிறது.


வெறும் பயணக் கதை அல்ல கம்யூனிச இயக்கத்தின் பிரசவ வலி என்ற கட்டுரையை க.பொ.அகத்தியலிங்கம் எழுதி உள்ளார். கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை.
கடவுளின் பெயரால் காமக்கூத்து என்ற கட்டுரை தமிழகத்தில் தேவதாசிகள் என்ற பெயரில் வந்துள்ளது. இப்புத்தகத்தைப் பற்றி பொ.வேல் சாமி கட்டுரை எழுதி உள்ளார். தேவதாசிகள் வாழ்க்கை முறையைப் பற்றி நூலாசிரியர் தரும் தகவல்கள் மனிதாபிமானமுள்ள எவரையும் பதற வைக்கும் என்று குறிப்பிடுகிறார் வேல் சாமி.


தமிழினி வெளியிட்டாக வந்த முன்னத்தி என்ற நாவலை மாற்கு என்பவர் எழுதி உள்ளார். இரு ஒரு வரலாற்று நாவல். ஒவ்வொருவரும் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவாகக் கட்டுரை எழுதியிருப்பவர். அ.ஜெகநாதன்.


இப்படி புதிய புத்தகம் பேசுது என்ற ஏப்ரல் மாதம் வெளிவந்த பத்திரிகை முழுவதும் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறது.

இது பாரதி புத்தகலாயம் தயாரிக்கப்பட்ட பத்திரிகையாக இருந்தாலும், அவர்கள் புத்தகங்கள் மட்டுமல்லாமல் மற்றவர்கள் புத்தகங்களையும் அறிமுகப் படுத்தி உள்ளார்கள்.. புத்தகம் பேசுகிறது இதழில் என் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர் சா.கந்தசாமி எழுதியிருக்கிறார். இந்தப் பத்திரிகை கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
ஒவ்வொரு மாதமும் கொண்டு வருவது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. புத்தகம் பேசுது தொண்டு தொடரட்டும்.


( தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஏப்ரல் 2021 திண்ணையில் வெளிவந்தது )