அழகியசிங்கர்

சில தினங்களுக்குமுன் வாசிப்போம் வாசிப்போம் பகுதியில் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் படித்தவுடன் என் இலக்கிய நண்பர் ஒருவர் தீவிரமாகி விட்டார். அவர் முயற்சியில் நான் குறிப்பிட்டப் புத்தகத்தின் விற்காத பிரதிகளை எடுத்து வந்தோம். இது ஒரு ரேடியோ நாடகம். காந்தி இறந்தபின் உடனடியாக எழுதப்பட்ட ரேடியோ நாடகம். ஜெர்மன் மொழியிலிருந்து நேரிடையாக தமிழில் மொழி பெயர்த்தவர் ஜி கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகத்தை ஏ கே கோபாலன் என்பவர் பதிப்பித்துள்ளார்.
இந்தப் புத்தகம் எல்லோருக்கும் போகவேண்டும் என்ற உயரிய நோக்கமே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. புத்தகத்தின் பெயர் ‘மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்.’ கெட்டி அட்டைப் போட்டு இந்தப் புத்தகத்தை அருமையாக தயாரித்துள்ளார்கள்.
இந்தப் புத்தகத்தின் விலை ரூ.25தான். பணத்தை என் கணக்கில் அனுப்பி வைத்தால் உடனடியா புத்தகத்தை அனுப்பி வைப்பேன். இந்தப் புத்தகத்தை நண்பர்கள் யாருக்காவது அன்பளிப்பாக நீங்கள் தரலாம். அல்லது திரும்ணம் போன்ற ஒருவைபவத்தில் நன்கொடையாகக் கொடுக்கலாம். பணத்தை அனுப்பிவிட்டு முகவரியை தொலைப்பேசியில் தெரிவிக்கவும்.