அழகியசிங்கர்
ஞானக்கூத்தன் மறைந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர் நினைவாக அவர் கவிதையை இங்கு வெளிப்படுத்துகிறேன.
அதனால் என்ன
ஞானக்கூத்தன்
பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.
