துளி : 57 – கவிதைக்குக் கொண்டாட்டம்

துளி : 57 – கவிதைக்குக் கொண்டாட்டம்

அழகியசிங்கர்

இந்த முறை இரண்டு கவிதை நூல்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது.  ‘ஸ்பாரோ’ இலக்கிய விருது 2019,  யுவன் சந்திரசேகருக்குக் கிடைத்துள்ளது. கவிதை வகைமைக்காக.  சாகித்திய யுவபுரஸ்கார் விருது சபரிநாதனுக்கு வால் என்ற கவிதைத் தொகுதிக்குக்  கிடைத்திருக்கிறது.  வாழ்த்துகள்.

இதைத் தவிர ஆத்மாநாம் பெயரில் ஆண்டுக்கு ஒரு கவிதைத்தொகுதிக்குப் பரிசு வழங்குகிறார் சீனிவாசன். தனியாக ஆத்மாநாம் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி உள்ளார்.  கவிதை நூலிற்குப் பரிசு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  

இந்த வீருதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் கவிதை நூலிற்கும் மட்டும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.   ஏனென்றால் அந்த அளவிற்கு கவிதை நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன.   ஓராண்டில் அதிகமாக பிரசுரமாவதில் கவிதை நூல்கள் முதலிடம் பெறும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒரு கவிதை நூலை விற்பது என்பது பூஜ்யம்தான். தெரிந்தவர்களிடம், உறவினர்களிடம்தான் கவிதை நூல்களை விற்க வேண்டும்.  அல்லது தள்ள வேண்டும்.  அதனால் சில பதிப்பாளர்கள் கவிதை நூல்களை வெளியிடுவதில்லை.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன