மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

அழகியசிங்கர்  

சிறுத்தையாகவும் மான் குட்டியாகவும்மாறுபவன்

ஜெம்சித் ஸமான்

இன்று ஒரு 

ஓவியனை சந்தித்தேன் 

முதலில் 

காட்டை வரைந்தான் 

பின் ஒவ்வொரு மிருகங்களாக 

வரைய ஆரம்பித்தான் 

மான் ஒன்றின் பக்கத்தில் 

சிறுத்தையை வரைந்த போது 

இரண்டும் 

உயிர்பெற்றுக் கொண்டது 

உயிருக்குப் பயந்த மான் குட்டி 

காடு மேடெல்லாம் ஓடியது 

கோரப்பசியோடிருந்த 

சிறுத்தை வேட்டையாடத் துரத்திச் சென்றது.

ஓவியன் அதனை 

விளையாட்டைப்போல ரசித்து ரசித்து 

சிரித்துக் கொண்டிருந்தான் 

தீராப் பசியோடு

மான் குட்டியை நெருங்கிய 

சிறுத்தையை நொடிப் பொழுதில் 

மான் குட்டியாக மாற்றிவிட்டான் 

சிறிது சிறிது நேரத்திற்குள் 

அவன் சிறுத்தையாகவும் 

மான் குட்டியாகவும் 

மாறிக்கொண்டிருந்தான்..

நன்றி : நகுலனின் வளர்ப்புப் பூனை – ஜெம்சித் ஸமான் – மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – பக்கங்கள் : 88 – விலை : ரூ.70

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன