60வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

இது ஒரு மொழிபெயர்ப்பு கூட்டம். சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 60வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (17.07.2021) நடைபெற உள்ளது.

எல்லோரும் சமகால உலகக் கவிதை என்ற புத்தகத்திலிருந்து கவிதைகள் வாசிக்க உள்ளோம்.

கலந்துகொண்டு சிறப்புச் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Topic: VIRUTCHAM POETRY 60th Meeting Time: Jul 17, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/82115635611…

Meeting ID: 821 1563 5611

Passcode: 427213

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் இரா.முருகன், அழகியசிங்கர்.

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள்.

இக் கூட்டம் 09.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எல்லோரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்புச்

விருட்சம் பெருமையுடன் வழங்கும் 59வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 59வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி நாளை மாலை 6.30மணிக்கு (10.07.2021) 


எல்லோரும் மற்றவர்களுடைய கவிதைகளைப் படித்துச் சிறப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Time: Jul 10, 2021 06:30 PM

IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/84517469696…

Meeting ID: 845 1746 9696

Passcode: virutcham

நடந்தாய் வாழி, காவேரி – 2

 
அழகியசிங்கர்


(தொடர்ச்சி)


ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும்.
அதில் குறிப்பிட்டிருக்கிற இடமெல்லாம் நாமும் ரசித்த இடமென்று தெரியும்.
‘நடந்தாய் வாழி காவேரி‘யைப் படிக்கும்போது அதில் ஒரு பகுதி நான் வசித்த பகுதி. அதை அவர்கள் எழுதிய விதத்தைப் படித்து ரசிக்க முடிந்தது.


இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி பங்களூரிலிருந்து ஆரம்பிக்கிறது.
இப்பயண நூலால் பல புராணக் கதைகள் தெரிய வருகின்றன. சரித்திர கதைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அங்கு வாழ்ந்து வரும் மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.


இதைவிடப் படிப்பதற்கு எளிமையாகவும் ஒரு பயண நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது.


நான் இன்னும் தொடர விரும்புகிறேன்.


திருமுக்கூடலில் உள்ள அகஸ்தியேச்வரா ஆலயம் ஒரு பெரிய அமைப்பு. அந்த ஆலயத்தில் அகஸ்தியேச்வரா மணலால் அமைந்த லிங்கமாகத் தோற்றமளிக்கிறார்.
இன்னொரு புராணக் கதை. ஒரு சமயம் அகஸ்தியர் இங்கு லிங்கம் ஒன்றைப் பூஜிக்க விரும்பி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நர்மதையிலிருந்து ஒரு லிங்கத்தைக் கொணரும்படி ஹனுமானுக்கு உத்தரவிட்டாராம். ஹனுமான் லிங்கத்தைக் கொண்டு வராததால் அகஸ்தியரே மணலைக் கொண்டு ஒரு லிங்கத்தை உருவாக்கி பூஜித்தார். ஹனுமான் வந்தவுடன் மணல் வடிவத்தைப் பார்த்து கோபம் கொண்டு அதைத் தகர்த்து விட முயன்றார். ஹனுமானின் முயற்சிகள் வெற்றி பெறாவிட்டாலும் அவருடைய தாக்குதலின் விளைவாகத்தான் அந்த லிங்கத்தின் தலையில் ஒரு பள்ளம் ஏற்பட்டது என்பது ஐதிகம்.
சோமநாதபுரத்தில் பிரஸன்ன சென்னகேசவ ஆலயம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஹோய்சால சிற்பச் செல்வத்தின் சிறந்த சின்னங்களில் ஒன்றான இந்த அமைப்பு ஹளேபீடு ஆலயத்தைப் போல் அவ்வளவு பெரிதாக இல்லாவிட்டாலும் மொத்தத்தில் பார்ப்பதற்கு அதைவிட அதிக அழகாகத் தோற்றமளிக்கிறது. மூன்று பகுதிகள் கொண்ட இந்தக் கோவில் ஹோய்சால மன்னன் மூன்றாவது நரசிம்மன் காலத்தில் கி.பி.1269இல் கட்டப்பட்டது. அந்த மன்னனின் ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரி சோமநாதர் என்பவர் அந்த ஆலயத்தைக் கட்டுவதில் முயற்சி மேற்கொண்டு அங்கு ஒரு கிராமத்தையும் அமைத்தார். அவருடைய பெயரே அந்த கிராமத்திற்கும் சோமநாதபுரம் என்று இடப்பட்டது.
வரலாற்று வழியில் திப்பு சுல்தானும், ஐதீக ரீதியில் ஸ்ரீரங்க நாதரும் தவிர, ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மற்றுமொரு சிறப்பு. அங்கு அடிக்கடி தொத்து நோய் ஏற்படும் என்பது.


ஸ்ரீ ரங்கநாதர் கோயிலுக்குப் போகும் வழியில் திப்புவின் பிரசித்தி பெற்ற நிலவறைச் சிறைச் சாலையைப் பார்த்தார்கள்.


கோவில்களில் பல்வேறு கல்வெட்டுக்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கி.பி.1210 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஆகும்.


ஸ்ரீரங்கப்பட்டிணம் 1120 ஆம் ஆண்டில் விஷ்ணுவர்த்தனின் சகோதரன் உதயாதித்யனால் நிறுவப்பட்டதென்பதும் வரலாறு மூலம் அறியப்படும்.
ரங்கநாதர் ஆலயம் தவிர கங்காதரேஸ்வரர் ஆலயம், நரசிம்மர் ஆலயம் இரண்டும் திராவிட பாணியில் அமைந்தவை.


பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் படையினர் ஏழு ஆண்டுக் காலத்திற்குள் இருமுறை முற்றுகையிட்டார்கள். திப்பு சுல்தான் தீவிரமாக எதிர்த்துப் போராடினார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.


1799இல் மாலவல்லி என்னும் இடத்தில் நடந்த போரில் திப்புவின் படைகளைத் தோற்கடித்துவிட்டு பிரிட்டிஷ் படைகள் ஸ்ரீரங்கப்பட்டிணத்தை நெருங்கின.
கும்பாஸ் என்ற சமாதி திப்பு தன்னுடைய தாய், தந்தை இருவருக்கும் நிறுவியது. சதுர வடிவில் உச்சியில் ஒரு மூட்டமும், மூலைகளில் விமானப் பலகணிகளும் கொண்ட அழகான கட்டடம் கும்பாஸ்.
கிருஷ்ணராஜ சாகரம் நோக்கிப் புறப்பட்டார்கள். கண்ணம்பாடி அணையையும் பிருந்தாவனத் தோட்டத்தையும் வண்ண விளக்குகள் வெளிச்சத்தில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சித்தாபூரில் வர்ணா என்னும் ஒருவகைப் பாம்புகள் மரக்கிளைகளில் ஏராளமாகச் சுற்றிக்கொண்டிருக்குமாம். புலி நடமாட்டம் அதிகமாம். இரவு படுக்கப் போகுமுன், பரண் மீது படுப்பார்கள். வீடுகளைச் சுற்றி முள் கம்பிகளைப் போட்டு புலி வராமல் வேலி கட்டியிருப்பார்கள்.
தலைக்காவேரி காவேரி பிறக்குமிடம் ஒரு சிறிய சுனை. சுமார் நான்கடுக்கு நான்கடி சதுரமாக ஒரு சின்ன தொட்டிபோல் கட்டியிருக்கிறார்கள். அங்கே இருக்கும் பெரிய பட்டர் காவேரியைப் பற்றிக் கதை சொல்கிறார்.
சஹ்யாத்திரி மலை என்று இந்தப்பிராந்தியத்தைக் கூறுகிற வழக்கம். மேற்குத் தொடர்ச்சி மலைக்கே இப்படி ஒரு பெயர் என்று நினைக்கிறேன். பிரும்மகிரி என்றும் இதைச் சொல்வதுண்டு. கவேரா என்ற மகரிஷி இங்குத் தவம் செய்தார். பிரும்ம அவருக்கு லோபா முத்திரை என்ற பெண்ணை அருளினார். எழில் மிக்க அந்தப் பெண்ணை அகத்தியருக்கு மணம் செய்து கொடுத்தார் கவேர முனிவர். வோபாமுத்திரை விஷ்ணு மாயையின் அம்சம். அவளே தன்னை இரு உருவங்களாக ஆக்கிக்கொண்டாள் என்றும் கூறுவார்கள். ஒரு அம்சம் லோபமுத்திரை என்ற பெண். இன்னொரு அம்சம் காவேரி என்ற புனித நீராக அகத்தியரின் கமண்டலத்திலிருந்தது. ஒரு நாள் ஒரு காகம் கமண்டலத்தின் மீது அமர்ந்து அதைக் கவிழ்த்துவிடவே நீர் கீழே பெருகி ஓடத் தொடங்கிற்று. திருமாலின் உருவமான நெல்லி மரத்தின் அடியிலிருந்து காவேரி முன்னேறிற்று. பிரும்மகிரியிலிருந்த ஒரு சிறு ஓடையாக ஓடும் காவேரியோடு, பாக மண்டலத்தில் கனகா என்னும் நதி கலக்கிறது. கங்கையோடு முனையும் மறைவான சரஸ்வதி என்ற நதியும் சேர்வதாகச் சொல்கிறார்கள். பாகமண்டலம் கடைத்தெருவில் வண்டி நுழைந்தது. பாகமண்டலம ஒரே நிழல்காடு, நெடிய மரங்கள், சோலைகள், அதைப் பார்க்கும்போது இன்னொரு இடம் ஞாபகம் வந்தது. அதுதான் சாயாவனம் என்ற சாயக்காடு.
பாகமண்டலத்தில்தான் காவேரியின் முதல் உபநதி கனகா வந்து கலந்து கொள்கிறது.கனகா காவேரியுடன் கூடம் இடத்திற்கு அருகில் பாகண்டேசுவரர் ஆலயம் இருக்கின்றது.
இப்போது குடகு நாடை விவரிக்கிறார்கள். குடகு நாட்டின் அழகை அந்தப் பாதையில் போகும்போதுதான் தெரிகிறது. குளிர்ந்த காற்று, நிசப்தம், பட்சி ஓசைகள், காற்றில் கலக்கும் அலைத் தாவரங்கள், மணக்கலவைகள், ஒவ்வொரு திருப்பத்திலும் மாறி மாறி வரும் புதிய புதிய மலை, பள்ளத்தாக்குக் காட்சிகள், ஆங்காங்கு தென்படும் குடகியரின் தனிப்பட்ட உடுத்தும் முறை – இவைதான் குடகு.
சாலையில் ஒரு இடத்தில் திரும்பியதும், திடீரென்று காவேரி சோலையோரமாகக் காட்சி கொடுத்தாள். நாபோலுவைத் தாண்டிக் குஷால் நகருக்குச் செல்லும் வழியில் பத்திரி என்ற கிராமத்திற்கருகே காவேரி திரும்பவும் குறுக்கிட்டாள்.
வீரராஜபேட்டையில் அவர்கள் குடகியர்களைப் பார்க்கிறார்கள்.


ராமநாதபுரத்தில் இருந்து மூன்று மைல் உள்ள ஒரு கிராமத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டிருந்தது. ஜங்கம சந்நியாசிகளால் நிறுவப்பட்டது. ஜங்கமகட்டே என்ற பெயர் இந்த அணைக்கு. அணைக் கட்டியிருப்பதால் இந்தக் கிராமத்துக்கு கட்டேபுர என்று பெயர் வைத்திருக்கிறார். ஊர் வாசிகள் இரவு நேரத்தில் இந்த அணைக்கட்டு பகுதியை பொதுக் கழிவிடமாகப் பயன்படுத்துவார்கள்.


கிருஷ்ணராஜ சாகர் மூலம் மைசூர் வருகிறார்கள். சிவசமுத்திரத்திற்கு அதற்கு முன் போகிறார்கள். அதை விட்டு அவர்களால் வர முடியவில்லை.


சாத்தனூர் சிறிய பஞ்சாயத்து சிறு நகரம். அங்கிருந்து அர்க்காவதி சங்கமத்திற்குச் சென்றார்கள். லம்பாடி கிராமத்தைப் பார்க்கிறார்கள். ஆர்க்காவதி ஆறு காவேரியோடு சங்கமம் ஆகிறதைப் பார்க்கிறார்கள். ஹன்னடு சக்ர என்ற இடத்தைப் பார்க்கிறார்கள். அங்கிருந்து மேகதாட்டு என்ற இடத்திற்கு வருகிறார்கள்.

போகும் வழியில் ஒரு கிராமத்திற்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறான். வறுமை நிறைந்த கிராமம். காபூஙூகள் போன்ற நாடோடிகளும் கன்னடம் பேசும் நாயக்கர்களும் சேர்ந்து வாழ்கிறார்கள். லம்பாடிகள் ஏன் இங்கு வந்தார்கள். ஏன் இங்கயே தங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.


பெண்ணாகரத்தில் அன்று வாரச் சந்தை. அங்கிருந்து கிளம்பி வர மனதே இல்லை அவர்களுக்கு.


(இன்னும் வரும்)

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 4 ஜூலை 2021 அன்று வெளிவந்தது)

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் இரா.முருகன், அழகியசிங்கர்.

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இக் கூட்டம் 09.07.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Zoom MeetingTime: Jul 9, 2021 06:30 PM Mumbai, Kolkata, New Delhiவிருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டம்https://us02web.zoom.us/j/85726527619…Meeting ID: 857 2652 7619Passcode: virutcham

2You and M.m. AbdullaLikeCommentShare

0

நடந்தாய் வாழி, காவேரி – 1

 


அழகியசிங்கர்


நான் பொதுவாகப் பயண நூல்களைப் படிக்கத் தயக்கம் காட்டுவேன். இதில் என்ன இருக்கிறது? பயணத்தைப் பற்றி எழுதியிருப்பார்கள் என்று நினைப்பேன். 23.06.2021 அன்று சூம் மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுதினம். அதைக் கொண்டாடும் முகமாக ‘சிட்டியும் – தி.ஜானகிராமனும்’ எழுதிய ‘நடந்தாய் வாழி, காவேரி’ என்ற புத்தகம் பற்றி கூட்டம்.

புத்தகம் படித்து எழுத வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டேன். படிக்கப் படிக்கக் குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டே வந்தேன். முதலில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.இது ஒரு பயண நூல் என்பதால்படிக்கப் போரடிக்கவில்லை. அதனால் தொடர்ந்து படிக்க முடிந்தது.

இந்தப் புத்தகம் சிட்டி – தி.ஜானகிராமன்எழுதியது. 287 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் சிட்டியும் ஜானகிராமன் எந்தந்தப் பகுதிகளில் எழுதினார்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் குறிப்புகளை இங்குக் குறிப்பிடுகிறேன் :

– காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் என்ற உண்மை தெளியத் தெளிய அவர்கள் மேற்கொண்ட பொறுப்பு சாதாரணமானதல்ல என்ற உணர்வு சிறிது தயக்கத்தையும் அளித்தது.

– மயிலாடுதுறையில் ஒரு கை காட்டியைப் பார்க்கிறார்கள். கோவலனும், கண்ணகியும் சென்ற சுவட்டில் புகாரிலிருந்து மதுரை வரை நடந்தே செல்ல வேண்டுமென்ற ஆசை ஏற்படுகிறது.

– செயற்கைக் கோள்கள் சுக்ரனை வலம் வரும் இந்த நாளில் இது என்ன ஆசை? அவர்களுக்கே புரியவில்லை. அதனால் நடந்து செல்லாமல் நடையும் காருமாக சென்று காவேரியை தலையிலிருந்து கால்வரைப் பார்த்து வருகிறார்கள்.

– பூவர் சோலை மயிலால், புரிந்த குயில்கள் இசைபாட, தான் நிலை திரியாத் தண்டமிழ்ப்பாவை என்று இளங்கோ அனுபவித்த பூரிப்பை அவர்களும் அடைந்து கொண்டே சென்றார்கள்.

– சென்னையிலிருந்து குடகு நாட்டுத் தலைக் காவேரியைக் காணப் புறப்பட்ட அவர்கள் முதன் முதலாக வட ஆர்ச்சாட்டில் பூம்புகாரைப் பார்த்தபோது அவர்களுக்கு நெஞ்சு கொள்ளா வியப்பாக இருந்தது.

– முதலில் சென்னையிலிருந்து பெங்களூர் சாலைக்குப் போகிறார்கள்.

– தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த பாயம்பள்ளி என்ற இடத்தைப் பார்வையிடுகிறார்கள்.

– கி.மு 1500 முதல் கி.மு 500 வரை வாழ்ந்த கற்கால மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதற்காகத் தொல்பொருள் துறையினர் அரிய தடயங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

– கி.மு 1500 முதல் கி.மு 1000 வரையிலான காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவர்கள்.

– மலைக் குன்றுகளில் அவர்களுக்கு உறைவிடமாக இருந்த பல குகைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

– காட்டை அழித்து நாடாக்க அவர்கள் செய்த முயற்சிகள் – வேட்டையாட கற்கோடலி கள், வில், அம்பு பயன்படுத்தியது தெரிந்தன.

– சமையலுக்குப் பயன்பட்ட பானை வகைகளின் சிதறிய துண்டு – பெண்களின் அணிகலங்கள். மண்ணலான பாசி மணிகள், அதேபோல் கற்காலமாகிய கி.மு 1000முதல் கி.மு 300 வரையிலான காலத்தில் வாழ்ந்த மக்கள் கையாண்ட கருவிகளும் கண்டு பிடித்தார்கள்.

முதலில் பெங்களூரிலிருந்து கொள்ளேகாலம் போய்ச் சேர்க்கிறார்கள். இருட்டில் சென்றதால் சிவசமுத்திரம் போக முடியவில்லை. மறுநாள் கொள்ளேகாலத்திலிருந்து சிவ சமுத்திரத்திற்குப் போகிறார்கள். சிவசமுத்திரம் அடர்ந்த காடு நிறைந்த ஒரு தீவு. பாலத்தைக் கடந்து தீவுக்குள் சென்றவுடன் பழைய அழகு நிறைந்த சிவசமுத்திரம் கிராமத்தைக் கண்டார்கள். அந்தத் தீவைச் சுற்றி காவேரி இரண்டு கிளைகளாகப் பிரிந்து வளைந்து வந்து, பார்சுக்கி, ககனசுக்கி என்ற இரு பெரும் நீர்வீழ்ச்சிகளாக இருநூறு அடி ஆழத்தில் பாய்ந்து மீண்டும் ஒன்றுகூடுகிறது. பல பிரம்மாண்டமான பாறை முண்டு குமிழியிட்டு, குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தாள் காவேரி.

அங்கிருந்து அவர்கள் ககனசுக்கி நோக்கிப் புறப்பட்டார்கள்.தீவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ககனசுக்கியை பார்சுக்கியின் மூத்த சகோதரி என்று கூறலாம். உயரம், ஓசை, பாயும் நீரின் பரிமாணம் எல்லாவற்றிலும் ககனசுக்கியே பெரியது. சுமார் மூன்று மைல் நீளமும் முக்கால் மைல் அகலமும் உள்ள சிவசமுத்திரம் தீவில் நான்கு கோவில்களும், ஒரு முஸ்லிம் சமாதியும் இருக்கின்றன. பார்சுக்கி நீர் வீழ்ச்சிக்குப் போகும் வழியில் தீவில் இருக்கும் நான்கு கோவில்களில் முக்கியமானவை சோமேஸ்வர சிவாலயமும், ரங்கநாத விஷ்ணு ஆலயமும் ஆகும்.

சோமேஸ்வரர் ஆலயம் பழமை நிறைந்த பெரிய அமைப்பு. விஷ்ணு ஆலயத்தில் ஜகன் மோஹன ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார். இந்தக் கோவிலுக்குக் கோபுரம் இல்லை. காவேரி அம்மனின் விக்ரஹமும் இந்தக் கோவிலில் காணப்படுகிறது. மேலே காவேரியின் ஓட்டத்தை எதிர்நோக்கிச் செல்லும் அவர்களுக்கு சோமநாதபுரம் வரை வழிகாட்டி விளக்கிக் கூறுவதற்காக சிவசமுத்திரம் விஷ்ணு ஆலயத்தில் சேவை செய்து வந்த ஒரு பட்டரை அங்குள்ள துறவி ஏற்பாடு செய்து கொடுத்தார். சோமநாதபுரம் போகும் வழியில் அகண்ட காவேரிபோல் தோற்றமளித்த ஓரிடத்தில் ஒரு தாழ்வான அணைக்கட்டைப் பார்த்தார்கள். அந்த அணைக்கட்டிற்கு மாதவ மந்திரி கட்டே என்று பெயர்.

தொன்மை மிகுந்த தலைக்காடு சென்றடைந்தார்கள்.அங்குக் கீர்த்தி நாராயண சுவாமி என்ற கோவிலைப் பார்க்கச் சென்றபோது ஒரு கனவுலகத்திற்கே சென்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். கீர்த்தி நாராயணசாமி கோவில் மணற் குன்றுகளிடையே ஒரு பள்ளத்தில் புதைந்திருப்பதைக் கண்டார்கள். 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி திருமலை ராஜா என்பவர் ஒரு கொடிய நோய்க்கு உட்பட்டு இருந்ததால் தலைக்காட்டிற்கு வந்து வைத்தீஸ்வரர் கோவிலை வழிபட்டு சிகிச்சை தேடினார். அவருடைய மனைவி ரங்கம்மாள் என்பவள் அவரைப் பார்ப்பதற்காக ஸ்ரீரங்கப்பட்டனத்திலிருந்து புறப்பட்டுத் தலைக்காடு வந்தாள்.

வரும்போது ஸ்ரீரங்கப்பட்டன நிர்வாகத்தை மைசூர் மன்னரிடம் ஒப்படைத்திருந்தாள். ரங்கமாளிடமிருந்த மிகுந்த மதிப்புற்ற மூக்குத்தி ஒன்றைக் கவர்ந்துகொள்ள மைசூர் மன்னர் திட்டமிட்டார், தம்முடைய சூழ்ச்சி பலிக்காமற் போனதும் அவர் தலைக்காட்டின் மீது படையெடுத்து வந்தார். போரில் திருமலை ராஜா இறந்து விட்டதும் பத்தினி ராணி ரங்கம்மாள் காவேரிக்கு விரைந்து தன்னுடைய விலையுயர்ந்த மூக்குத்தியை நீரில் எறிந்துவிட்டுத் தானும் மூழ்கி உயிர் நீத்தாள். தலைக்காட்டுக்கு அக்கரையில் உள்ள மாலங்கி என்ற இடத்தில் அவள் காவேரியில் மூழ்கியபோது தனக்கு நேர்ந்த துன்பத்தை வெளியிடும் வசையில் ஒரு சாபமிட்டவாறே உயிர் நீத்தாள்.

தலைக்காடு முழுவதும் மண்மூடிப் போகட்டும். மாலங்கி ஒரு சுழற்சுனையாகட்டும். மைசூர் மன்னர்களுக்குச் சந்ததி இல்லாமற் போகட்டும். என்பதுதான் தலைக்காடு சாபத்தின் சொற்கள். சமவெளிப்பரப்புத் தோற்றத்தை உடைய அந்தப் பகுதியில் தலைக்காட்டில் மட்டும் எங்கிருந்து இவ்வளவு மணல் வந்து சேர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமாகவே இருக்கிறது.

(இன்னும் வரும்)
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 27.06.2021 அன்று வெளியானது)

58வது கவிதை விருட்சம் நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 58வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (03.07.2021) நடை பெற்றது.


எல்லோரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்கள்.  அதன் காணொளியின் பதிவு

மூன்று புத்தகங்கள்…

07.05.2021துளி – 207

அழகியசிங்கர்

டாக்டர் பாஸ்கரனின் பிறந்தநாள் இன்று என்பதை ராமகிருஷ்ணன் மூலமாக முகநூலில் தெரிந்துகொண்டேன்.
முதலில் அவரை வாழ்த்தி விடுகிறேன்.  நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். 
இந்த முறை மூன்று புத்தகங்கள் டாக்டர் பாஸ்கரன் எனக்குக் கொடுத்துள்ளார்.  அந்தப் புத்தகங்கள் முறையே கிணற்றுக்குள் காவிரி, படித்தேன் ரசித்தேன், சிறுவாணி சிறுகதைகள்.
என்னிடம் இந்த ஆண்டு சேர்ந்துள்ள புத்தகங்கள் குறைந்தது 30வது இருக்கும்.  இவற்றையெல்லாம் படித்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டுமென்று வைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்பது தெரியாது. 
ஆனால் கொஞ்சப்பக்கங்களையாவது படித்துவிட்டு எதாவது எழுதலாமென்று நினைக்கிறேன்.
முயற்சி செய்கிறேன்.
படித்தேன் ரசித்தேன் என்ற கட்டுரைப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  
இன்று பலரும் டாக்டர் பாஸ்கரன் எழுதியதைப் போல் புத்தகங்களைப் படித்து புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். நானும் இந்த முயற்சியில் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறேன்.  நீங்களும் படிக்கலாம் படிக்கலாம் என்ற பெயரில் 2 தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன்.  3வது தொகுதி தயார் நிலையில் உள்ளது.  அதன்பின் வாசிப்போம் வாசிப்போம் என்ற பெயரில் ஒரு புத்தகம் வாசிப்பனுபவத்தை வைத்து எழுதியது. அதையும் கொண்டு வந்து விட்டேன்.
புத்தகங்களைப்பற்றிச் சொல்வது மூலம் நம் அறிவை வளர்த்துக் கொள்கிறோம்.
முகநூலில் பலர் இதுமாதிரி புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக்கொண்டு எழுதுவார்கள் என்று தோன்றுகிறது.
இப்படிப் புத்தகங்களைப் பற்றி எழுதுவது நல்ல ஆரோக்கியமான முயற்சி.  யார் எழுதினாலும் அது தொடர வேண்டும். 
சமீபத்தில் அ.கார்த்திகேயன் என்ற நண்பர் விருட்சம் வெளியீடாக வந்துள்ள பல நூல்களை வாங்கி ஒவ்வொன்றாக முகநூலில் தெரியப்படுத்துகிறார்.
‘படித்தேன் ரசித்தேன்’ என்ற டாக்டர் புத்தகம் 50 புத்தகங்கள் பற்றியது. இந்த 50 புத்தகங்களையும் அவர் படித்து ரசித்ததை சிறப்பான முறையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.  அவருக்கு என் வாழ்த்துகள்.
இன்னும் எத்தனையோ புத்தகங்களை அவர் அறிமுகப்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும்.  தொடர்ந்து இதுமாதிரி புத்தகங்களையும் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வேறு யாரும் கண்டுகொள்ளாத புத்தகங்களை அவர் எடுத்து எழுத வேண்டும்.  
21 கதைகள் கொண்ட ‘கிணற்றுக்குள் காவிரி’ என்ற பாஸ்கரின் சிறுகதைத் தொகுப்பு பவித்ரா பதிப்பகம் மூலம் சிறுவாணி வாசகர் மையம் மூலம் வந்துள்ளது. எல்லாப் பத்திரிகைகளிலும் இப்புத்தகத்திற்கான விமர்சனம் வந்துள்ளன.  அதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
இத் தொகுப்புள்ள சில கதைகள் விருட்சம் இதழில் வெளிவந்திருக்கின்றன.  
ஒவ்வொரு கதைக்கும் பின்னால், மௌனமாய் நிற்கும் மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ, உணர்வுகளையோ என்னால் மறக்க முடியாது – மறுக்கவும் முடியாது என்று குறிப்பிடுகிறார் பாஸ்கரன். உண்மைதான்.
சிறுவாணி சிறுகதைகள் 2020 என்ற புத்தகம் சிறுவாணி வாசகர் மையம் – ரா.கி ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி 2020 என்ற பெயரில் 15 கதைகளை எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.,  பாராட்டப்பட வேண்டிய விஷயம்.   ஜெ.பாஸ்கரன் அலுப்பில்லாமல் இம்மாதிரியான போட்டிகளில் கலந்து கொண்டிருப்பார்.   கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் போட்டியில் நம் கதைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ இல்லையோ எழுதுபவர்களை உற்சாகப்படுத்துகிற விஷயமாகத்தான் எனக்குப் படுகிறது.
இத் தொகுப்பில் பஜ கோவிந்தம் என்ற பாஸ்கரின் கதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கப் பரிசு கிடைத்துள்ளது.
டாக்டரின் இந்த மூன்று புத்தகங்களை முழுவதுமாகப் படித்துவிட்டு என் கருத்துக்களைப் பின்னால் தெரிவிக்கிறேன். 
டாக்டர் ஜெ. பாஸ்கரனுக்கு என் பிறந்த தின வாழ்த்துகள்.

இரண்டு புத்தகங்கள்

துளி – 206

அழகியசிங்கர்


ஒவ்வொரு வாரமும் நடத்தும் கவிதை நேசிக்கும் கூட்டத்தில் நான் கவிதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறேன்.


நான் அறிமுகப்படுத்துகிற கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையும் வாசிக்கிறேன். கவிதை நேசிக்கும் கூட்டத்தை ஒரு மாதத்தில் நான்கு விதமாய்ப் பிரிக்கிறேன்.
முதல் வாரம் எல்லோரும் கவிதைகள் வாசிக்க வேண்டும். இரண்டாவது வாரம் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். மூன்றாவது வாரம் மொழிப்பெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க வேண்டும்.


நாலாவது வாரம் கவிதையைக் குறித்து உரையாடல். இதுமாதிரி எங்காவது யாராவது கவி அரங்கம் நடத்துகிறார்களா? அப்படி நடத்திக்கொண்டிருந்தால் விபரம் தரவும்.
இந்த நான்கு வாரங்களிலும் நான் கவிதைப் புத்தகம் அறிமுகப்படுத்துவேன்.
கடந்த இரண்டு வாரங்களில் நான் அறிமுகப்படுத்திய கவிதைநூல்கள் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


முதல் கவிதைத் தொகுதி ‘சுனையில் நீரருந்தும் சிறுத்தையின் நாக்கு’ என்றப.கு.ராஜனின் மொழிபெயர்ப்புப் புத்தகம்.


அதிலிருந்து ஒரு கவிதை.

அமிரிதா ப்ரிதம் கவிதை சங்கடம்


இன்றைக்குச் சூரியன் ஏதோ சங்கடத்திலிருந்தது

அது ஒளியின் ஜன்னலைத் திறந்தது \

பின்னர் மேகங்களின் ஜன்னலை மூடியது

பின்னர் இருண்ட படிகளில் இறங்கிச் சென்றது


அடுத்த வாரத்தில் நான் அறிமுகப்படுத்திய புத்தகம்.


‘2000-2020 சிறந்த படைப்பாக்கங்கள்’ என்ற புத்தகம். கலைஞன் வெளியிடு.
7 தொகுப்பாசிரியர்கள் தொகுத்த புத்தகம்.

அதில் என் கவிதை


புத்தகத்துடன் பேசுகிறேன்


என் அறையில்

புத்தகங்களின் வரிசை

ஒரு புத்தகம் இன்னொரு

புத்தகத்தோடு பேசுவதில்லை

நான் மனிதர்களை நம்புவதில்லை

எதையாவது பேசி

என் மனதைக் குழப்பி விடுவார்கள்

அவர்கள் புகழ்ந்தால்

எனக்கு ஆபத்து

என்று எண்ணிக்கொள்வேன்

புகழாவிட்டாலும்

ஏதோ திட்டமிடுகிறார்கள்

என்று தோன்றும்

அல்லது அவர்களைப் பற்றி

நினைத்துக்கொண்டு

சதா உழன்று கொண்டிருக்கிறார்களென்று

நினைத்துக் கொள்வேன்


என்னுடன் பேசாத

புத்தகம்தான் என் நண்பன்.

ஏ,டி.எம் கொள்ளையன் ஹரியானாவில் சிக்கினான்

துளி – 205

அழகியசிங்கர்

இந்தத் தலைப்புச் செய்தியை நாள் ஒரு தினசரியில் படித்தேன்.  திகைப்பு அடைந்து விட்டேன்.  எப்படி யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுக்க முடியும்.  இந்தத் திருட்டில் ஏடிஎம் கருவிகளைக் கொள்ளையர்கள் உடைக்க வில்லை.


பத்தாண்டுகளுக்கு முன் நான் ஒரு தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  அங்கு ஒரு பெண் அலுவலர் நேர்மையானவர், பணி புரிவதில் நல்ல அனுபவமுள்ளவர் மீது ஒரு பழி.
அவர் எப்போதும் ஏடிஎம்மில் பணத்தை வைப்பவர்.  கிடிக்குப்பிடி அலுவலகப் பணிகளுக்கிடையே பணத்தையும் ஏடிஎம்மில் வைத்துவிட்டு வந்து விடுவார்.
அவருடைய செயலில்  எந்தத் தவறும், எப்போதும் ஏற்படாது.


அவர் ஒரு முறை வைத்து விட்டு வரும்போது 1லட்சம் ரூபாய் ஏடிஎம்மில் காணோம். 
தலைமை அலுவலகத்திலிருந்து  கண்காணிப்புத் துறையினர் ஓடி வந்து அவரைப் பலவாறு கேள்விகள் கேட்டுக் குடைந்துகொண்டே இருந்தார்கள். காமெரா பொருதியிருந்ததால் காமெரா மூலம் பார்த்தார்கள்.  பின் பணம் பட்டுவாடா செய்த சிப்பந்தியைப் பார்த்தார்கள்.  ஒரு பலனும் இல்லை.  


பணம் எப்படிப் போனது என்று தெரியவில்லை.  எல்லோரையும் சந்தேகப் பட்டார்கள்.    
யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.  கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று.  எப்படிக் கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை.  


கடைசியாக ஒரு வழியாகத் தீர்மானம் ஆனது.  அந்தப் பெண் அலுவலர் இனிமேல் ஏடிஎம் ப்ககம் போகக் கூடாது என்று.

அந்தப் பெண் அலுவலர் இழந்த பணத்தைக் கட்டவேண்டுமென்றும், அவருக்கு வரக்கூடிய இன்க்ரிமென்ட்  ஒரு வருடம் கட் என்று தீர்ப்பளித்தார்கள்.
நேர்மையான அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட சோதனையை நினைத்து வருந்தி, கிளை மேலாளரும், துணை மேலாரும் அந்த அலுவலருக்கு தன்னால் முடிந்த பங்கைக் கொடுத்தார்கள்.


என்னால் இதை மறக்கவே முடியாது.  உடனே அந்த அலுவலரை அந்தக் கிளை அலுவலகத்திலிருந்து மாற்றி விட்டார்கள்.


ஒன்றுமே செய்யாத குற்றத்திற்கு அவருக்குக் தண்டனை கிடைத்தது.
நேற்று செய்தித்தாளில் இந்த நூதனமான முறையில் திருடிச் சென்றதைப் பார்க்கும்போது, அந்த அலுவலர் ஞாபகம்தான் வந்தது. 


பல ஆண்டுகளுக்கு முன்பே இதுமாதிரி திருட்டு நடந்திருக்கும் அது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறதோ என்று தோன்றுகிறது.