தேவராஜ் விட்டலன் கவிதை
வளைந்த
மரக்கிளையில்
அமர்ந்து கொண்டு
சப்தமிடுகிறது
ஒரு சிட்டுக் குருவி…
.விடுபட்ட
சொந்தங்களை
சப்தமிட்டு
அழைக்கிறது…
யாரும் வராத
கணத்தில்
ஏக்கத்தோடு
பறந்து செல்கிறது
மரக்கிளையை
விட்டு.
நன்றி : ஜான்சிராணியின் குதிரை – கவிதைகள் – தேவராஜ் விட்டலன்- வாசகன் பதிப்பகம், 167 ஏவிஆர் காம்ப்ளக்ஸ், அரýசுக் கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007, கைபேசி : 9842974697 – பக்கங்கள் : 64 – விலை : ரூ.50