மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 80

பிரதீபன் கவிதை

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பதுபோல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை

நன்றி : கண்மறை துணி – கவிதைகள் – பிரதீபன் – வெளியீட்டாளர் : பிரதீபன், 25கே, ஜோதிநகர் 4வது தெரு, காமராஜ் மீட்டிங் ஹால் எதிரில், கோவில்பட்டி – 628 501 – விலை : ரூ.125 – பக்கங்கள் : 240

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன