புத்தக அறிமுகம் 1

அழகியசிங்கரின் இரண்டாவது கவிதைத் தொகுதியின் பெயர்தான் வினோதமான பறவை. ஆரம்பத்திலிருந்து வெளியிடப்பட்ட சிறு சிறு கவிதைத் தொகுதிகள் ஆன யாருடனும் இல்லை, தொலையாத தூரம் எல்லாம் ஒன்றாக்கி அழகியசிங்கர் கவிதைகள் என்ற தொகுதியை 2006ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட தொகுதிதான் 2013ல் வெளிவந்த வினோதமான பறவை என்ற தொகுப்பு. 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது. 110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ. 80.

மாடுகள்

வழியை மறித்துக்கொண்டு
நின்ற மாடுகளிடம்
கேட்டேன் :
போகட்டுமா என்று…
நீ நகரப் போகிறாயா
நாங்கள் நகர வேண்டுமா
என்றன அவைகள்
வால்களை ஆட்டியபடி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன