மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 49

அழகியசிங்கர்

      இன்னும் கேள்விகள் (?) 
சொல்லித் தந்து நகரும்
வாழ்க்கை


கலாப்ரியா 

‘இன்னும் ஒரு கட்டுப்போலதான்
பாக்கியிருக்கும்…’

சிமினி விளக்கு
கருகத் தொடங்கும் வரை
பீடி சுற்றிக் கொண்டிருப்பாள்…

‘இன்னும் விளக்கை
அணக்யலையா..’ என்பான்

எல்லாரும் பசியுடன்

பசியுடன்
படுத்துக் கொள்ள,

‘இன்னும் புத்தி வரலையா
கெழவனுக்கு…’ என
அம்மா அப்பாவிடம்
செல்லக் கோபத்துடன்

குசுகுசுக்கும்
இருட்டு நாடகத்தை
மனசுள் பார்த்து
வெட்கத்துடன் குப்புறப்
படுப்பாள்….

தன்னிச்சையாய்
விரல் சொடுக்க நினைத்துப் பின்
சாக்கிரதையாய் தவிர்ப்பாள்

சமைந்தகுமரி

நன்றி : கலாப்ரியா கவிதைகள் – சந்தியா பதிப்பகம், பு எண் : 77 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 – பக்கங்கள் : 292 – விலை : ரூ. 240 – தொலைபேசி : 044-24896979 – இரண்டாம் பதிப்பு : 2015 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன