மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 40





அழகியசிங்கர்

 உறவு

பசப்பல் கே ராஜகோபால்


நட்டநடுக் கனவினிலே
நான் விழித்து நோக்கினால்
தொட்டுவிட்ட கையெங்கோ,
தொடுவித்த உளமெங்கோ?
பட்டப் பகலென்றால்
பற்றிய கை விடுவேனோ?
முட்ட முழு மோனத்தில்
மூழ்காமல் நிற்பேனோ?
தொட்டெழுப்பித் துடிக்க விட்டுத்
தூரநின்று சிரித்திருந்தால்
தொடுவித்த உறவதுதான்
தொடராமற் போய்விடுமோ?
எத்தனை நாளானாலும்,
எத்துயரம் பட்டாலும்,
இப்படியே காத்திருப்பேன்
ஆற்றலென்று உனக்கிருந்தால்,
ஆலவிதை பழுக்காதோ?
பார்வையென்று உனக்கிருந்தால்
பழுத்த விதை தெரியாதோ?

நன்றி : பசப்பல் கவிதைகள் – கே ராஜகோபால் – எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு : 1974 – பதிப்பாளர் : எழுத்து பிரசுரம், 19-எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 – விலை : ரூ.3.50

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன