மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 33

அழகியசிங்கர்  



 உலகம்



ஷண்முக சுப்பையா




அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி.
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்.
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு.
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்.
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை.

நன்றி : எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு : ஏப்ரல் 1975 – 19 – எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 – விலை ரூ.3 – 62 பக்கங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன