மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 30

சிட்டுக்குருவிப் பாட்டு

பாரதிதாசன் 


சிட்டுக்குருவிச் சிறுபெண்ணே,
சித்தம் போலச் செல்பவளே,
கொட்டிக் கிடக்கும் தானியமும்
கொல்லைப் புழுவும் திண்பவளே,
எட்டிப் பறந்தாய் மண்முழுதும்
ஏறிப் பறந்தாய் வானமெல்லாம்
இஷ்டப் படிநீ செய்கையிலே
ஏன்? என்பாரைச் üசீý என்பாய்.

உன்னைக் கேட்பேன் ஒருசேதி.
உரிமைத் தெய்வத்தின் மகளே,
தின்னத் தீனி தந்திடுவேன்.
தெரிவிக்காமல் ஓடாதே!
மன்னன் அடிமைப்பணி யில்லான்.
வாய்மைச் சிறகால் உலகேழும்.
மண்ணும் காந்திப் பெருமானார்
மகிழும் தோழி நீ தானா?

நன்றி : பாரதிதாசன் கவிதைகள் – மணிவாசகர் பதிப்பகம், 55 லிங்கித்தெரு, சென்னை 600 001 – இந்தப் பதிப்பில் புதிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன – விலை ரு.17.50 (பிளாஸ்டிக் உறையுடன்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன