இன்று சர்வதேச பூனைகள் தினம்

சிங்கள மொழிக் கவிதை
பூனையாகிய
நான்…


உங்களைப்
போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப்
போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப்
போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப்
போல என்னால் அழ இயலாது
உங்களிடம்
கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம்
என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப்
போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப்
போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப்
போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப்
போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை
உங்களைப்
போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
உங்களைப்
போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
உங்களைப்
போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
உங்களை
விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில்
– எம்.ரிஷான் ஷெரீப்

கவிஞர் பற்றிய
குறிப்பு
தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
சமூகம்
சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். ஒரு ஆசிரியையாகக்
கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்,
இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல்
என இதுவரையில் பத்து தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன