இரண்டு கவிதைகள்


அழகியசிங்கர்


ஒன்று

நான் பஸ்ஸில்
வந்து கொண்டிருந்தேன்
இருக்கை எதுவும்                                                             தட்டுப்படவில்லை
பஸ்
ஊர்ந்து ஊர்ந்து
சென்று கொண்டிருந்தது
பல ஊர்களைத் தாண்டியது
பல மனிதர்களைச் சுமந்த சென்றது
வயல்களைத் தாண்டியது
உயரமான மரங்களைத் தாண்டியது
கூட்ட நெரிசலில்
ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில்
சுழன்றபடி சென்றது
ஊர்ந்து ஊரந்து
பஸ் நகர்கிறது
நான்
பஸ்ஸில்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்

இரண்டு

இந்த இடத்திற்கு
நான் வருவதற்குமுன்
இந்த இடம்தானா
என்று எனக்குத் தோன்றியது…
                                                                        (2011)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன