ராமலக்ஷ்மி




சாதீயம்
வ்வொரு வேட்டைக்குப் பிறகும் 
விருந்துகள் நிகழ்கின்றன. 
வேலி தாண்டி வந்து விட்டதாக 
அறைந்து இழுத்து செல்லப்பட்ட 
வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை
குறிப்பாக அதிர்ச்சியில் உறைந்த 
மிருதுவான கண்களின் சுவையை 
வெட்கமின்றி சிலாகித்து மகிழ்கின்றன 
வேங்கைப் புலிகள். 
கானகமாகிக் கொண்டிருக்கிறது 
மானுடர் உலகம். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன