கசடதபற ஜøலை 1971 – 12வது இதழ்


நான் குளம்

ஆ சந்திரபோஸ்

நாளை பெய்யும மழையில்
நான் நிரம்பி விடுவேன்
நேற்றுவரை….
குடிக்க நீர் கொடுத்தேன்,
குளித்துத் துவைத்தனர்.
குதித்து விளையாடிக்கூட
என் மீது படகு விட்டனர்.
வயிறு புடைக்கத் தின்று
ஏப்பம் விட
கொக்குகளுக்கு மீன் கொடுத்தேனே…..
மீனுக்கு என் ‘பாசம்’
இரையாக வில்லையா?
ஏன்?
இன்று கூட என்மேல்
படிந்து கிடக்கும் அழுக்கை
உரமாக்குகிறீர்களே…
நான் என்ன கெட்டுவிட்டேன்…?
நாளை பெய்யும் மழையில்
நான் நிரம்பி விடுவேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன