சந்திரா மனோகரன் .

               
               
                     1.  என்னைக்  காண வில்லையென்று 

                    அவள்  அவளுக்குள்  தேடிக் கொண்டிருந்தாள் 

                     உறுமும்  புலிபோல்  நான் 

                    தப்பித்துவிட்டேன் 

                    எனக்குக்  கூண்டுவாழ்க்கை  பிடிக்காது 

                     அவள்  என்னைமட்டும்  தேடியிருந்தால் 

                    விலகிவந்திருக்கமாட்டென் , ஒருவேளை 

                     என்னைக்  கொல்வதற்குப்  பயன்படும் 

                    ஒரு  கூராயுதம்  அத்தருணத்தில் 

                     அவள்  கைக்கு  சிக்காமலிருந்தது .

                2.  மான்கள்  துள்ளும்  புல்வெளியில் 

                     என் தேடல்  விரிந்துகொண்டே  போயிற்று 

                     பெருகும்  ஈரப்  பனிபோல .

                      வேட்டைக்காரனின்  மிதியடிகளில் 

                     என் ரத்த  நாளங்கள்  நசுங்கின .

                     அவன்  காலடியோசையின்  மிரட்சியில் 

                     எங்கோ  தொலைவில்  ஓர்  அலறல் 

                     எனக்கு  ஒன்று  புரியவில்லை 

                     அழகு  புள்ளிமானின்  தோலை  மட்டும் 

                     யாருக்காகவோ  விட்டுச்  சென்றிருக்கிறான் .

                 

                 3.   சாமங்கியும்  சம்பந்தியும்  அவரைப்பூ  நிறமும் 

                        வருகிறாள்  அவள்  தீயின்  நாக்குபோல !

                        வளைக்கரங்களில்  ததும்பும் 

                        தேநீர்க் கோப்பைகளும் , திகட்டாத  பார்வையில் 

                        குழைந்து  குழைந்து  வரும்  வாசமும் 

                        நீருக்காக  ஏங்கும்  வேர்களைப்  போன்றவனுக்கு 

                        வெற்றுத்  தாளில்  வடிந்த 

                         வெறும்  கவிதைகளாகத்தான் ….

                         குப்பைக்கூடை  நிரம்பி  வழிகிறது 

                        அவன்  மனதைப்போலவே .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன