யாப்பியல்

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.  இதுவரை முதல் இதழில் வந்த கவிதைகளைப் படித்திருப்பீர்கள்.  இப்போது இரண்டாவது இதழ்.

நவம்பர் 1970   –  இரண்டாவது இதழ்

மா. தக்ஷிணாமூர்த்தி

பூங்குயிலே,
யாப்பியல் கற்றனையோ நீ?
இசைக்கும் வசைக்கு –
மின்றியமையாத
‘சை’ கைகளைக் கற்றுக்கொள்.
இலக்கண மிதுவே.
இன்றே லிடையிற் படையாய்ப்
படுத்து விடுவாய்.
அது உன்பாடு.
என் பாடு
உன்னைப் பார்த்துக்
கா கா எனக் கரைதல்.
காவாக்கால் சோகாப்பா-
யிசையிழுக்குப் பட்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன