வரட்டும்


அழகியசிங்கர் 








சந்திரமௌலி என்பவர்
அங்கிருந்து இங்கு வருகிறார்
இங்கிருந்து அங்கு போகிறார்

பென்சன்காரர்கள்
எங்கே எங்கே எங்கே
என்று கேட்கிறார்கள்

அவர்
ஆமாம் ஆமாம் ஆமாம் என்கிறார்

யாருக்கும் எந்தத் தீர்வும் கிடைப்பதில்லை
குறையில்லாத மனிதர்களும் இல்லை
2014 பிப்ரவரி மாதம் பின்பு
இவரும் பென்சன்காரர்தான்
                                (25.09.2013) 




“வரட்டும்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன