லாவண்யா

மனச்சிறை
பெய்த மழையில்
வனம் கடலானது
வீசிய புயலில்
மரங்கள் விழுந்தன
மரம் விழுந்த்தில்
என் கூடு  தொலைந்த்து
நீரும் தீயும்
என் கூடழிப்பது
என் பிறவியின் சாபம்
முதல் குருவி துவங்கி
என்வரை
சலியாமல் கட்டுகிறோம்
மீண்டும் மீண்டும்
கூடிழக்கும் துயரும்
கூடுகட்டும் சிரம்மும்
அனுபவித்தால்மட்டுமே புரியும்
உலர்ந்த புற்களை
மெலிந்த சுள்ளிகளை
சேகரிக்கும்போது
கூடு ஒரு மனச்சிறையென்று
ஒரு குரல்
தலைக்குள் கேட்டது.
நிறுத்திவிட்டேன்.
 
அற்ப சந்தோஷம்
குயில் கூவக்கேட்டு
கனவு காணலானேன்
குளிர் காற்று வீசவே
மனங்குளிரலானேன்
மின்னல் மின்னக்கண்டு
பெரிதும் மகிழ்ந்து போனேன்
கருமுகிற்கூட்டம் வரவே
களிப்படையலானேன்
அற்ப சந்தோஷத்தில்
ஏமாந்து போனேன்.
 

“லாவண்யா” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன