ஒரு விதை போல

ரவிஉதயன்

துளிகள் அடர்ந்து
வானம் பெயர்ந்து விழுகிறது
மழை தாரைகள்
நிற்காது மண் முற்றத்தில் தாளமிசைக்கின்றன
தாளக்கிரமங்களை
செவியுற்றவாறே
ஒரு விதைபோல
வீழ்ந்து கிடக்கிறேன்
சரி பாதி
தொட்டிலில் உறங்கிக்கொண்டும்…
சவப்பெட்டியில் சரிந்துகொண்டும்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன