நதி இலை எறும்பு

உன் வார்த்தைகளின் தடம் பற்றி
நான் நடந்துகொண்டிருக்கிறேன்

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்  
அன்பை

காதலை
நம்பிக்கையை
துரோகத்தை
கோபத்தை

வன்மத்தை
வெறுமையை
நிறைவை

கொழுத்த உன் கன்னத்தில் 
திரண்டிருக்கும் அம்மச்சம்
என் கண்களில் விழுந்து உறுத்துவதை
அறியாமலேயே..!

******
செ.சுஜாதா,
பெங்களூர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன