காவேரி

 
         உடைகளில்லாதிருப்பதிலொரு
         உல்லாசத்தை உணர்கிறேன்
         உடலில் கவிந்த ஊர்ப்பழுதியை
         ந்தியில் நனைந்து கரைக்கிறேன்
         என் நேற்றைய வானவில்
         நுரைக்குமிழிகளாகிக் கரையும் காட்சியை
         ந்தியில் கப்பல்விட்ட சிறுவனாகி
         வேடிக்கை பார்க்கிறேன்
         புலரியின் இளஞ்சூட்டில் வியர்க்க
         இலைகளால் விசிறிக்கொள்ளும்
         கரையோர வாழைமரங்கள்
         ந்தியின் நடுவில் உலர்ந்த மணற்திட்டில்
         உறுமீன் வருமுன் உடற்பயிற்சி
         செய்யுமொரு கொக்கு.
         மாமரத்துக் கிளிகளுக்கெப்போதும்
         மாளாத சந்தோஷம்
         உடல் கவ்விய உடைகளுடன்
         அவள் அருகில் வருகிறாள்.
         அவளுள் நுழைய இசைவை விழையும்
         என் விண்ணப்பங்களை
          நிராகராக்கவில்லையெனினும்
          சம்மதிக்காமலென்னைக் கொல்லும்
         மல்யுத்த உடற்கட்டுக்காரி
         கொங்கை குலுங்க சிரித்தபடி வருகிறாள்
         கிளிகடித்த மாம்பழமொன்றை
         என்மீது விட்டெறிந்து
         கரையேறிப் பறக்கிறாள்
         பின்தொடரும் பரபரப்போடு நான்
         நீந்திக் கரைசேர்கையில்
         களவு போயிருந்தததென்
         அம்மணம் மறைக்கும் திரை.
 
 
     
 

“காவேரி” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன