எப்படி சௌகரியம் ?!
மழைச்சாரலில் நனைந்த
என் கவிதையை
உலரவைக்க தென்றலை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
உலராத உயிர்ப்புள்ள
கவிதையில் மட்டுமே
விருப்பமுள்ளவராயின்
முன்னரே நனைந்துள்ள
உங்களின் ஈர இதயம் காட்டி
என்னிடமிருந்து
கவிதையைப்
பெற்றுக்கொள்ளலாம்
உலர்ந்து தெளிந்த
கவிதையில் மட்டுமே
விருப்பமுள்ளவராயின்
அலங்கமலங்கலாக
சிறிது அழிந்து மறைந்த
எழுத்துகளை உங்கள்
விருப்பப்படி நிரப்பிக்கொள்ள
வேண்டிவரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன