மனதுக்குப் பிடித்த கவிதைகள் 57

அழகியசிங்கர்
 
காடு
 
வஸந்த் செந்தில்
 
ஒருவர் சென்று
மழையோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
மலர்களோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
சுள்ளிகளோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
பழங்களோடு திரும்பி வந்தார்
ஒருவர் சென்று
பறவைகளோடு திரும்பி வந்தார்
 
பச்சயங்களோடு ஒருவர்
மிருகங்களோடு ஒருவர்
மீளவேயில்லை ஒருவர்
 
ஒருவர் பயந்து
உள் செல்லவேயில்லை
 
அவரவர் தேவைகளை
அவரவரக்கு அளித்து
வழிதொலைத்த பாதைகளை
வழியெல்லாம் வைத்து
 
அடர்ந்து கிடக்கிறது காடு
 
நன்றி : மழையும் நீயும் – கவிதைகள் – வஸந்த் செந்தில் – பதிப்பகம் : இலக்குமி நிலையம், ப எண் : 53, பு எண் : 115, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 – முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2001 – விலை : ரூ.30 – பக்கம் : 144
 
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன